தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா பாடல்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
'மிஷன் மஜ்னு' இந்திப் படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தித் திரையுலகில்தான் அருமையான காதல் பாடல்கள் உருவாகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"இந்திப் பாடல்கள் வெகுவாக ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக இந்தி காதல் பாடல்கள் என்னைக் கவர்கின்றன. இதுபோன்ற அருமையான பாடல்கள் இந்தியில்தான் அதிகம் உருவாகின்றன.
"ஆனால் தென்னிந்தியாவில் மசாலா பாடல்கள்தான் அதிகம் வருகின்றன. இந்தியில் எனது முதல் காதல் பாடலைக் கேட்கவும் திரையில் காணவும் ஆவலாய் உள்ளேன்," என்கிறார் ராஷ்மிகா.
அவரது கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திப் பட வாய்ப்புகளுக்காக அவர் இவ்வாறு பேசியுள்ளதாக இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கெனவே கன்னட திரையுலகம் குறித்து ராஷ்மிகா தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையாகின. இதையடுத்து அவருக்கு கன்னடப் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என சிலர் குரல் கொடுத்தனர். அந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் அடுத்த விவகாரம் தலைதூக்கி உள்ளது.
இதையடுத்து சில நாள்கள் எந்த விவகாரம் குறித்தும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என ராஷ்மிகாவின் நலம் விரும்பிகள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

