மலைக்கிராமத்தின் கதை

மலைக்கிராமத்தின் கதை

3 mins read

முன்புபோல் பெரிய படங்­களில் நடிக்­க­வில்லை என்றாலும் தமக்­கான நல்ல வாய்ப்­பு­கள் தேடி வரு­வது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் லட்­சுமி மேனன்.

இவர் கதை நாய­கி­யாக நடித்­துள்ள புதுப் படம் 'மலை'. அறி­முக இயக்­கு­நர் முரு­கேஷ் இயக்­கு­கி­றார்.

ஒரு மலைக்­கி­ரா­மத்­தில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பு­தான் இந்­தப் படத்­தின் கதை. நக­ரத்­தில் வசிக்­கும் படித்த பெண்­ணுக்கு வெளி­நாட்­டில் வேலை பார்க்க வேண்­டும் என்­பது கனவு. ஆனால் குடும்­பத்­தின் நிர்­பந்­தம் காரண­மாக கிரா­மத்­துக்கு வரு­கி­றார்.

"அந்­தப் பெண் கிரா­மத்­தில் என்ன கற்­றுக்­கொண்­டார், வாழ்க்கை அந்தப் பெண்­ணுக்கு என்ன சொல்­லிக்­கொ­டுத்­தது என்­பதை சுவா­ர­சி­ய­மான திரைக்­க­தை­யில் விவ­ரித்­துள்­ளேன்," என்­கி­றார் இயக்­கு­நர் முரு­கேஷ்.

இப்­ப­டத்­தின் நாய­கி­யாக நடிக்­கக்­கேட்டு ஐஸ்­வர்யா லட்­சுமி, அஞ்­சலி, ஆண்ட்­ரியா, சாய்பல்லவி உட்­பட பதி­னைந்துக்கும் மேற்­பட்ட நாய­கி­களை அணு­கிப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னா­ராம்.

சில­ருக்கு கதை பிடித்­தி­ருந்­தா­லும் கால்­ஷீட் ஒதுக்க முடி­ய­வில்லை­யாம். சிலருக்கோ, அறி­முக இயக்­கு­ந­ரின் படம் என்ற தயக்­கம் இருந்­துள்­ளது. அவர்­களில் யாருமே நடிக்க முன்­வராத நிலை­யில், லட்­சுமி மேனனை சந்­தித்து கதை சொல்லி இருக்­கி­றார்.

"தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு பேசி­ய­போது, நேரில் வரு­மாறு கேட்­டுக்­கொண்­டார். உடனே கேர­ளா­வுக்­குச் சென்று சந்­தித்­தேன். இரண்­டரை மணி நேரக் கதையை முழு­மை­யா­கக் கேட்டு முடித்த பின்­னர், தனக்­கான ஊதி­யம் குறித்து கூட ஏதும் பேசா­மல் கால்­ஷீட் ஒதுக்க முன்­வந்­தார்.

"அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் மலர். படப்­பி­டிப்­பின்­போது நூறு விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக ஒத்­து­ழைத்து நடித்­தார்.

"எனக்குத் தெரிந்து கதா­பாத்­தி­ரத்தை உணர்ந்து நடிக்­கும் நடி­கை­கள் தமிழ் சினி­மா­வில் குறைவு. லட்­சுமி மேன­னுக்கு அந்­தத் திறமை உள்­ளது. தவிர காட்­சி­களை மெரு­கேற்­றும் அறி­வாற்­ற­லும் அவ­ரி­டம் உண்டு.

"யோகி­பாபு சுருளி என்ற போலி மருத்­து­வ­ராக நடித்­துள்­ளார். மஞ்­சப்­பை­யில் ஊசி, மருந்து, மாத்­திரை என்று தூக்கிக்­கொண்டு அலை­யும் அவரு­டைய கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­களை வாய்­விட்­டுச் சிரிக்க வைத்து வயிற்றைப் புண்­ணாக்­கும் என்­ப­தற்கு இப்­போதே உத்­த­ர­வா­தம் தர இய­லும்," என்­கி­றார் இயக்­கு­நர் முரு­கேஷ்.

'மலை' படத்­தின் ஒவ்­வொரு காட்­சி­யும் யோகி பாபு­வுக்கு அத்­துப்­ப­டி­யாம். அவ­ருக்கு இந்­தக் கதை ஏற்­கெ­னவே சொல்­லப்­பட்­ட­தாம்.

"ஒரு கட்­டத்­தில் இந்­தப் படத்தை யோகி­பாபுவே தயா­ரிக்க ஆர்­வ­மாக இருந்­தார். அதன் பிறகு சில மாற்­றங்­கள் நடந்­த­தால் அது சாத்தி­ய­மா­க­வில்லை. எனி­னும் நான் தேடிச்­சென்று கால்­ஷீட் கேட்­ட­தும் நடிக்க முன்­வந்­தார்.

"காளி­வெங்­கட்­டுக்கு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரம். வழக்­கம்­போல் நடிப்­பில் அசத்தி உள்­ளார். சிங்கம்­புலி, கவி­தா­பா­ரதி, 'டாணாக்­காரன்' பிர­க­தீஸ்­வ­ரன், செம்­மலர் அன்­னம், மோக­னப்­ரியா என படத்­தில் இடம்­பெற்­றுள்ள ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் முக்கியத்து­வம் இருக்­கும்.

"இந்­தப் படத்­தில் பணி­யாற்­றிய அனைத்து தொழில்­நுட்ப வல்­லு­நர்­களும் எனது பதி­னைந்து ஆண்­டு­கால நண்­பர்­கள்.

"இசை­ய­மைப்­பா­ளர் டி.இமான் தனது வழக்­கமான பாணி­யில் இருந்து விலகி இயற்­கை­யோடு இரண்­ட­றக் கலந்­து­விட்­டதுபோல் எளிமை­யான, வரு­டிக்­கொ­டுக்­கும் இசையை அளித்­துள்­ளார்.

"படத்­தில் மொத்­தம் நான்கு பாடல்­கள். அவற்­றுள் தன்­னம்­பிக்கையை அளிக்­கும் வகை­யிலான பாடல் இளை­யர்­க­ளைக் கவ­ரும். அந்­தப் பாடலை வாணி ஜெய­ராம் பாடி­யுள்­ளார்.

"தேவை­யில்­லாத காட்­சி­கள் எது­வுமே படத்­தில் இருக்­காது. அதே­ச­ம­யம் படத்­தில் இடம்­பெற்றுள்ள ஒவ்­வொரு காட்­சி­யும் ரசிக்க வைப்­ப­தாக இருக்கும்.

"மலைக்­கி­ரா­மத்­தைப் போல் அரங்கு அமைத்து பல காட்­சி­க­ளைப் பட­மாக்கி உள்­ளோம். ஆனால் செயற்கை கிரா­மம் என்­பதை யாரா­லும் கண்­டு­பி­டிக்க இய­லாது," என்­கி­றார் இயக்­கு­நர் முரு­கேஷ்.

, :

  