'பொறாமைப்பட்டார் கமல்'

3 mins read
ef6ad9ec-8871-459a-9d35-1b171c0109ec
-

'ஜெய் பீம்' திரைக்­க­தையை நூல் வடி­வில் கொண்டு வரும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளார் சூர்யா. அவ­ரது '2டி' நிறு­வ­னம் இதற்­கான வேலை­க­ளைச் செய்து வரு­கிறது.

வெறும் திரைக்­கதை நூலாக அல்­லா­மல், படத்­தின் உரு­வாக்­கத்­தில் பங்­கெ­டுத்­த­வர்­க­ளின் உரை­யா­டல்­க­ளை­யும் உள்­ள­டக்கி வெளி­யா­கிறது இந்­நூல்.

இதற்­காக சூர்யா பதிவு செய்­துள்ள விஷ­யங்­கள் அவர் திரைப்­பட நடி­க­ரான பிறகு கடந்த இரு­பத்து ஐந்து ஆண்­டு­களில் எப்­படி ­எல்­லாம் உரு­மாறி உள்­ளார் என்பதை தெளி­வா­கப் புரிய வைக்­கும் என்­கி­றார்­கள் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­கள். சூர்­யா­வும் இதை ஒப்­புக்­கொள்­கி­றார்.

"நான் எவ்­வ­ளவோ மாறி­யி­ருக்­கி­றேன். வயது, அனு­ப­வம், திரு­ம­ணம், குடும்­பம், அக­ரம் அமைப்பு என வாழ்­வின் முக்­கி­ய­மான மாற்­றங்­களை எதிர்­கொண்டே பய­ணம் செய்­கி­றேன். வீட்­டில் மகன் என்­கிற இடத்­தில் இருந்து, கண­வன், தகப்­பன் எனப் பொறுப்­பு­கள் விரி­வ­டைந்­தி­ருப்­பது போலவே சமூ­கத்­தி­லும் எனக்­கான பொறுப்­பு­கள் விரி­வ­டைந்­தி­ருக்­கின்­றன.

"எனது 'அக­ரம் பவுண்­டே­ஷன்' போன்ற கல்வி உதவி இயக்­கம் தற்­செ­ய­லாக என் வாழ்­வில் வந்­தி­ருக்­க­லாம். அது எனக்­குக் காட்­டிய உல­க­மும் அறி­மு­கப்­ப­டுத்­திய உற­வு­களும் அசா­தா­ர­ண­மா­னவை. இவை எல்­லா­மும் சேர்ந்­து­தான் நம் வேலையை, செயல்­பாட்­டைத் தீர்­மா­னிக்­கின்­றன.

"எங்­கள் வீட்­டில் ஜோதி­கா­வையே எடுத்­துக்­கொள்­ளுங்­கள். அவ­ருக்கு மிகக் கறா­ரான பார்வை உண்டு. நான் நடித்த சில படங்­களை அவர் பார்த்­ததே இல்லை. 'நான் இந்­தப் படத்­தைப் பார்க்க மாட்­டேன்' என்று என்­னி­டமே வெளிப்­ப­டை­யா­கச் சொல்­லி­வி­டு­வார்.

"சில நேரங்­களில், 'ஏன் இந்த மாதி­ரி­யான வச­னங்­களை எல்­லாம் பேசு­கி­றீர்­கள்' என்று வருத்­தப்­ப­டு­வார். ஆரம்­பக்­கட்­டத்­தில் ஒரு தொழி­லில் நாம் காலூன்­றா­த­போது அன்­றைக்­கான வேகத்­தில் சில விஷ­யங்­க­ளைத் தெரிந்­தும் தெரி­யா­ம­லும் செய்­து­வி­டு­கி­றோம். அதன் பிற­கும் அப்­ப­டியே இருக்க வேண்­டிய தேவை இல்லை என்­பது அவ­ரது பார்வை. அவ­ரு­டைய இந்த எண்­ணத்தை நான் மதிக்­கி­றேன்," என்­கி­றார் சூர்யா.

திரை­யு­ல­கில் தமக்கு கமல்­ஹா­சன்­தான் முன்­மா­திரி என்று குறிப்­பி­டு­ப­வர், வணி­கச் சந்­தைக்­கான படங்­க­ளைத் தரு­வ­து­டன் நல்ல பரி­சோ­தனை முயற்­சி­க­ளி­லும் கமல் ஈடு­ப­டு­வது அவ­ரைப் பெரி­தும் மதிக்க வைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"தோல்­வி­க­ளால் கமல் ஒரு­போ­தும் துவண்டு போக­மாட்­டார் என்­ப­து­தான் அவ­ரி­டம் நான் பெரி­தும் மதிக்­கும் விஷ­யம். பெரிய தோல்­விப் படத்­தைக் கொடுத்­தி­ருப்­பார்; ஆனால் அடுத்து வரும் போதும் இன்­னும் பெரிய படத்­து­டன்­தான் வரு­வார். அது­வும் பாது­காப்­பான ஒரு பட­மாக இருக்­காது.

"இது­கு­றித்து பல­முறை யோசித்­தி­ருக்­கி­றேன். அவர் நினைத்­தால் ஒரு தோல்­வி­யி­லி­ருந்து மிக எளி­தாக வெளியே வந்­தி­ருக்­க­லாம் 'சக­ல­கலா வல்­ல­வன்' மிகப்­பெ­ரிய வசூல் வெற்­றி­யைத் தந்த படம். ஒரு தோல்­விக்­குப் பிறகு அவர் அதே­போன்ற படத்­து­டன் திரும்ப வந்­தி­ருக்­க­லாம். ஆனால் அவரோ, அடுத்து 'அபூர்வ சகோ­த­ரர்­கள்' போன்ற படைப்பு குறித்துதான் யோசிக்­கி­றார்.

"இது எனக்கு வாழ்­நாள் பாடம் போலவே இருக்­கிறது. எளி­மை­யான வெற்­றி­யை­விட அர்த்­த­முள்ள வெற்­றியே எனக்கு வேண்­டும். அதே­ச­ம­யம் ரசி­கர்­க­ளால் பேசப்­படும் நல்ல பட­மா­க­வும் அது இருக்க வேண்­டும்.

"என்­னைப் பொறுத்­த­வரை 'சிங்­கம்' படம் போன்ற வெற்­றி­களும் தேவை.

"அதற்­குப் பின் 'ரத்த சரித்­தி­ரம்' போன்ற படங்­க­ளை­யும் விரும்­பித்­தான் தேர்ந்­தெ­டுக்­கி­றேன். நிச்­ச­ய­மாக அது பரி­சோ­தனை முயற்­சி­தான். எனக்கு நானே வைத்­துக்­கொள்­கிற தேர்வு," என்­கி­றார் சூர்யா.

'ஜெய் பீம்' படத்­தைப் பார்த்­து­விட்டு கமல்­ஹா­சன் சுமார் அரை­மணி நேரம் பேசி­னா­ராம். அப்­போது எந்த இடத்­தி­லுமே இந்­தப் படம் தமக்கு ஒரு திரைப்­ப­டைப்­பா­கத் தெரி­ய­வில்லை என்­றா­ராம்.

"நான் யாரை என் முன்­னோடி என்று சொல்­கி­றேனோ, அவரே சொன்ன வார்த்­தை­கள் இவை. 'நான் இந்த மாதிரி படங்­க­ளைச் செய்­யத்­தான் ஆசைப்­ப­டு­கி­றேன். ஆனால், என்­னி­டம் யாரும் இப்­படி ஒரு கதையை எடுத்து வரவே இல்லை. பொறா­மை­யாக இருக்­கிறது' என்­றார் கமல்.

'இந்­தத் திரைக்­கதை அமைப்­பின் மேல் எப்­படி நம்­பிக்கை வைத்து முடி­வெ­டுத்­தீர்­கள்?' என்று அவர் கேட்­ட­போது, 'பர­வா­யில்லை, நாமும் கொஞ்­சம்­போல ஏதோ செய்­கி­றோம்' என்று நினைத்­துக் கொண்­டேன்.

"சூர­ரைப் போற்று', 'ஜெய் பீம்' இரண்டு படங்­க­ளுமே ஓடிடி வழியே வெளி­யா­னவை என்­றா­லும், திரை­ய­ரங்­கி­லும் நாங்­கள் சிறப்­புக் காட்­சி­க­ளைப் பார்த்­தி­ருந்­தோம். 'சூர­ரைப் போற்று' படம் முழுக்­கக் கை­தட்­டல், விசில். 'ஜெய் பீம்' முழுக்க அமைதி. இடை­வே­ளை­யில்­கூட யாரும் பேசிக்­கொள்­ள­வில்லை. ஜோதிகா 'இது பெரிய தாக்­கத்தை உரு­வாக்­கும்' என்­றார். இரண்டு படங்­க­ளுமே எனக்­குப் பிடித்­தி­ருந்­தது," என்­கி­றார் சூர்யா.