ரஜினி நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சுமார் 65 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாம். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் முக்கால்வாசி படமாக்கப்பட்டுவிட்டதால் படக்குழுவினர் அனைத்துப் பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளனர்.
முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கம்போல் சண்டை, நகைச்சுவைக் காட்சிகளில் அசத்தி உள்ளாராம் ரஜினி. வசந்த் ரவி வில்லனாகவும் அவரது மனைவி வேடத்தில் ரவீணா ரவியும் நடித்துள்ளனர்.
ஒரே இரவில் நடக்கும் கதை இது. அதனால் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்புக்கு இடைவேளை விடப்பட்டது. அடுத்து பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளனர். அப்போது இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
சென்னைக்கு அருகே உள்ள கடலூர் மாவட்ட கடற்கரைப் பகுதிகளிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்.
ஏப்ரல் மாதம் இசை வெளியீட்டு விழாவையும் அதன் பிறகு குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரக்கூடும்.

