'அதிகாலை காட்சிகளை தடை செய்யவேண்டும்'

'அதிகாலை காட்சிகளை தடை செய்யவேண்டும்'

2 mins read

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் அதிகாலை காட்சிகள் வெளியிடப்படுகின்றன.

அந்தக் காட்சிகளில் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். 11ஆம் தேதி வெளியான 'துணிவு', 'வாரிசு' படங்களின் முதல் காட்சியும் விஜய், அஜித் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டன.

அதனால் ஒரே திரையரங்கில் இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று கூடியபோது, அடிதடி, சச்சரவு, மோதல் ஏற்பட்டது. அதனால் அதி­கா­லைக் காட்­சி­களை நிரந்­த­ர­மாக நிறுத்­த­வேண்­டும் என்று பல சமூக ஆர்­வ­லர்­கள் தமி­ழக அர­சுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

அடி­தடி, மோதல்

அதி­காலை காட்­சி­களில் இரு­வ­ரது ரசி­கர்­க­ளுக்­கும் இடை­யில் பல மோதல் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றன. குறிப்­பாக சென்­னை­யில் ஒரு திரை­

ய­ரங்­கில் விஜய், அஜித் ரசி­கர்­கள் இடையே ஏற்­பட்ட மோத­லால் திரை

­ய­ரங்கு அடித்து நொறுக்­கப்­பட்­டது. பதா­கை­கள், சுவ­ரொட்­டி­கள் கிழிக்­கப்­பட்­டன.

எல்­லா­வற்­றுக்­கும் மேலாக பொது­மக்­கள் அந்த நேரங்­களில் சாலை­களில் செல்லமுடி­யாத அள­வுக்கு போக்­கு

­வ­ரத்து பாதிப்பு ஏற்­பட்­டது. அதனால் தேவை­யற்ற மோத­லைத் தவிர்க்க அதிக அள­வில் காவலர்கள் பணியில் அமர்த்­தப்­பட்­ட­னர்.

திமுக அமைச்­ச­ரான உத­ய­நிதி ஸ்டா­லின் குடும்­பத்­துக்கு தொடர்­பு­டைய 'ரெட்­ஜெ­யண்ட் மூவிஸ்' நிறு­வ­னம் இரண்டு படங்­க­ளை­யும் வெளி­யி­டு­வ­தால்­தான் நள்­ளி­ரவு, அதி­காலை காட்­சி­க­ளுக்கு அரசு அனு­மதி அளிக்­கிறது. அவர்­கள் வெளி­யி­டாத படங்­க­ளுக்கு இதுபோன்ற காட்­சி­களை அனு­ம­திப்­ப­தில்லை என்ற குற்­றச்­சாட்­டுகளும் எழுந்­துள்­ளன.

கண்டுகொள்­ளாத நடி­கர்­கள்

ஒரே நாளில் இரண்டு முன்­னணி நடி­கர்­

க­ளின் படங்­களை வேண்­டு­மென்றே வெளி­யிட்டு ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இப்­படி ஆட்­டம், பாட்­டம், கொண்­டாட்­டத்தை அரங்­கேற்றிய இரு நடி­கர்­க­ளுக்­குமே மறை­மு­க­மான பங்கு உண்டு. பட வெளியீட்டின்போது உயி­ரி­ழந்த ரசி­க­ருக்­காக சம்­பந்­தப்­பட்ட நடி­கர் தரப்­பி­லி­ருந்து இது­வரை எந்த ஓர் இரங்­க­லும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இறந்த இளை­ஞ­ரின் சித்தியும் நண்­பர்­களும் வெளியிட்ட காணொளியை சம்­பந்­தப்­பட்ட நடி­கர்­கள் பார்த்­தி­ருந்­தால் இனியாவது­ தங்­க­ளது படங்­க­ளுக்கு அதி­காலை காட்­சி­கள் வேண்­டாம் என்று சொல்­வார்­கள்.

இதுபற்றி இயக்­கு­நர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், "ரசி­கர்­கள் தங்­கள் பொறுப்பை உணர்ந்து செயல்­படவேண்­டும். இது வெறும் சினிமாதான். உயிரை விடும் அள­விற்கு இதற்கு முக்­கி­யத்­து­வம் தர வேண்­டி­ய­தில்லை. மகிழ்ச்­சி­யாக படத்தை பார்த்­து­விட்டு பத்­தி­ர­மாக வீட்­டிற்கு சென்­றாலே போதும். உயிர் போகும் அள­விற்கு கொண்­டாட்­டம் தேவை­யில்லை," என்று கூறியுள்ளார்.

இதுபோல் சம்பந்தப்பட்ட நடிகர்களும் கூறினால் ரசிகர்கள் கேட்பார்கள். ஆனால் அவர்கள்தான் கண்டுகொள்ளவில்லையே என்கிறது கோலிவுட்.