பூங்குழலி என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் ஐஸ்வர்யா லட்சுமிதான். 'பொன்னியின் செல்வன்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்று இவருக்கான ஓர் அடையாளத்தைக் கொடுத்தது.
இவர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் 'இதய' குறியீட்டுடன் நேற்று முன்தினம் பகிர்ந்திருந்தார். அதற்கு இருவரின் ரசிகர்களும் 'காதலர்களுக்கு வாழ்த்துகள்' என பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி, தனது இணையப் பக்கத்தில் முந்தைய பதிவிற்கு விளக்கம் அளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நண்பர்களே! எனது கடைசி பதிவு இவ்வளவு விரைவில்
அதிகமாக பகிரப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திக்க நேர்ந்தது, அதனால் ஒரு படத்தை எடுத்துப்
பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான்," என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கும் "அவர் உங்களுடையவர்," என்று குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' படம்
பலரின்
கவனத்தை ஈர்த்து வருகிறது.

