பக்தர்கள் ஒன்று சேர்ந்து தயாரித்த பக்திப் படம்

பக்தர்கள் ஒன்று சேர்ந்து தயாரித்த பக்திப் படம்

1 mins read
14f11134-ccd8-4b99-9e7b-e6f106bc5ec4
-

ஐ­யப்ப பக்­தர்­கள் சிலர் கூட்­டணி அமைத்து பக்­திப்­ப­டம் தயா­ரித்­துள்­ள­னர்.

'ஸ்ரீ சபரி ஐயப்­பன்' என்ற தலைப்­பில் உரு­வா­கி­யுள்ள அப்­படம் ஐ­யப்­பன் மகி­மை­களை கூறும் படைப்­பாக உருவாகி உள்­ளது. கதை, திரைக்­கதை, வச­னம், பாடல்­கள் எழுதி இயக்கி உள்­ள ராஜா தேசிங்கு முக்­கிய ­பாத்­தி­ரத்­தி­லும் நடித்­துள்­ளார்.

இதில் நாய­க­னாக விஜ­ய­பி­ர­சாத், நாய­கி­யாக பூஜா நாகர் நடித்­துள்­ள­னர். கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்­துக்­காளை, ராஜேந்­தி­ர­நாத், வடி­வேல் கணேஷ் என ஏரா­ள­மான நட்­சத்­தி­ரங்­கள் நடித்­துள்­ள­னர். பாபு அர­விந்த் இசை­ய­மைத்­துள்­ளார்.

"தமி­ழ­கம் கட­வுள்­கள் நட­மாடிய புண்­ணி­யப் பூமி. எனவே ஆன்­மிக படைப்­பு­க­ளுக்கு இங்கு எப்­போ­துமே வர­வேற்பு உண்டு. இது­போன்ற படங்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் வெளி­வர வேண்­டும்," என்று இயக்­கு­நர் பேர­ரசு இப்­ப­டம் குறித்து சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

'ஸ்ரீ சபரி ஐயப்பன்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி.