அண்மையில் வெளியான 'ராங்கி' படத்தில் நிருபராக நடித்து, சண்டைக் காட்சிகளிலும் அசத்தி இருந்தார் திரிஷா. பார்க்க இளமை துள்ளும் அழகியாக இருப்பதால் காதல் காட்சிகளில் மட்டும் நடிப்பேன் என நினைக்காதீர்கள். நான் சண்டைக் காட்சிகளிலும் நன்றாக நடிப்பேன் என்று நிரூபித்த இவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
'ராங்கி' படம், வெளிநாட்டுப் படப்பிடிப்பு பற்றி
"இயக்குநர் முருகதாஸ் கதை எழுத,
'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கிய படம் 'ராங்கி'. இதில் நிருபராக நடித்துள்ளேன். படப்பிடிப்பு லிபியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன்
'குந்தவை டூ ராங்கி'
'ராங்கி' படத்தில் குந்தவைக்கு நேர் எதிரான கதாபாத்திரம். நிருபர்கள் எப்போதும் ஒப்பனையின்றி எளிமையாக இருப்பார்கள். நானும் முடிந்தவரை அதுபோல் நடித்திருக்கிறேன். முகநூலில் கதை தொடங்கி, ஒரு பெண் சிக்கலில் சிக்கும் கதையாக உருவெடுத்து இருக்கிறது இந்தக் கதை. சண்டைக் காட்சிகளில் நானே நடித்து இருக்
கிறேன்.
நாயகன் பார்க்க புதுமுகமாக இருக்கிறாரே!
இயக்குநர் சரவணன் உஸ்பெகிஸ்தானில் ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவரின் பெயர் ஆலிவ். மிகவும் சிறப்பாக நடித்
திருக்கிறார். படம் முழுவதும் துறுதுறுவென்று இருப்பார். அனைவருக்கும் அவரின் நடிப்பு பிடிக்கும்.
படம் வெளியானதும் உங்கள் மனநிலை?
ஒவ்வொரு படமும் வெளியாகும்போது மக்கள் என்ன சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 'ராங்கி' என்னை மையப்படுத்தி எடுத்த படம் என்பதால் எது நடந்தாலும் நான்தான் அதற்குப் பொறுப்பு என்பதால் படம் வெளியாகும்போது பதற்றமாக இருந்தது.
உங்களை இயக்கிய இயக்குநர்கள்?
என்னை நல்ல கதைகளில், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த மணிரத்னம், கவுதம் மேனன், பிரேம்,
சரவணன் அனைவருக்கும் நன்றி. நல்ல கதையாக இருந்தால் புது இயக்குநர்கள் இயக்கத்திலும் நடிக்கத் தயார். ஒரு படம் முழுவதும் ரஜினியுடன் நடிக்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.
எங்கு சென்றாலும் 'குந்தவை'யாகப் பார்ப்பது?
இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி சொல்லவேண்டும். கல்கி நாவல் படித்தவர்களுக்குக் குந்தவை மீது பெரிய ஈர்ப்பு இருந்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேனா என்று பலரும் பயந்தனர். ஆனால் இன்று குந்தவை என்றால் நான்தான் என மக்கள் கூறுவதில் மகிழ்ச்சி.
திரிஷாவுக்கு 2022 எப்படி?
சென்ற ஆண்டு மிகவும் நன்றாக இருந்தது. 'பான்' இந்தியா படமாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக வாழ்ந்தேன். இனி இதுபோன்ற கதாபாத்திரம் கிடைக்குமா என்பது ஐயம். அந்தப் படம் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. 'ராங்கி' படத்திலும் என்னுடைய நடிப்பு மக்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்," என்றார் 'ராங்கி' நாயகி திரிஷா.

