மாதங்கி இளங்கோவன்
ரசிகர்களின் கைதட்டல்கள், விசில் சத்தம், ஆட்டம் என்று அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்
படத்திற்கான ஆரவாரத்திற்குப் பஞ்சமில்லை.
கார்னிவல் திரையரங்கில் புதன்கிழமை (ஜனவரி 11ஆம் தேதி) திரைப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 3.30 மணிக்குத் திரையிடப்பட்டது. அந்த நேரத்திலும் ஆயிரம் பேர் படத்தைப் பார்க்க வந்திருந்தனர்.
புதன்கிழமை மாலை 7.30 மணி காட்சிக்குச் சென்றேன். அஜித்தின் நடை, உடை, பாவனை அனைத்தும் இப்படத்தில்
அவருடைய வயதிற்கேற்ப இருந்ததோடு வில்லன் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதில் திறமையானவர் என்று நிரூபித்திருந்தார்.
படம் ‘பீஸ்ட்’, ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்களில் உள்ள சில காட்சிகளின் சாயலில் இருந்தது. இருப்பினும் திரைப்படத்தில் இணைத்திருந்த கருத்துகளும் திருப்புமுனைகளும் புதுமையானதாக இருந்தன.
ஜிப்ரான் இசையமைத்து,
அனிருத் பாடியிருந்த ‘சில்லா சில்லா’ பாடல் ஒளிபரப்பானபோது ரசிகர்கள் சிலர் குதூகலத்தில் நடனமாடினர். உள்ளூர் இசை
யமைப்பாளர் ஷபிர் இந்தப் படத்தின் ‘கேங்ஸ்டா’ என்ற பாடலை எழுதி, பாடியுள்ளார்.
பொதுமக்களின் அறியாமை, நிறுவனங்களின் சுயநலம் போன்ற கருத்துகள் திரைப்படத்தில் இடம்பெற்றன.
சிந்திக்க வைக்கும் கருத்துகள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் இருப்பதால் ‘துணிவு’ அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
‘துணிவு’ நான் எதிர்பார்த்ததுபோல் இருந்தது. கதையோட்டத்தில் இருந்த திருப்பங்கள் என்னை இருக்கையின் விளிம்பில் அமர வைத்து இருந்தது. மேலும் சண்டைக் காட்சிகளும் தத்ரூபமாக இருந்தன.
விக்னேஷ் கார்த்திகேசன், 24