'கோபமாக, வேகமாக பணியாற்றுவார்'

'கோபமாக, வேகமாக பணியாற்றுவார்'

1 mins read
b069421e-4f72-4887-b71e-55fe323d4359
-

தமிழ்த் திரை­யு­ல­கின் ஜாம்­ப­வான்­க­ளு­டன் தம்மை நடிக்க வைத்­த­தற்­காக இயக்­கு­நர் தங்­கர் பச்­சா­னுக்கு நன்­றிக்­க­டன் பட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார் யோகி பாபு.

தங்­கர் பச்­சான் இயக்­கத்­தில் உரு­வா­கும் புதிய படம் 'கரு­மே­கங்­கள் கலை­கின்­றன'. இதில் தனக்­கு­ரிய காட்­சி­களில் நடித்து முடித்­துள்­ளார் யோகி­பாபு.

"இந்­தப் படத்­தில் இயக்­கு­நர்­கள் பார­தி­ராஜா, கௌதம் மேனன், நடிகை அதிதி பாலன் எனப் பல திற­மை­சா­லி­கள் இணைந்­துள்­ள­னர். அவர்­க­ளு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு எல்­லா­ருக்­கும் அமைந்­து­வி­டாது.

"தங்­கர் பச்­சான் இயக்­கும் படம் என்­ப­தால் தயக்­க­மின்றி கால்­ஷீட் ஒதுக்கி நடிக்­கத் தயா­ரா­னேன். கார­ணம், நமது கடந்­த­கால வாழ்க்­கையை நினை­வுக்கு கொண்டு வரு­ப­வர் அவர். 'அழகி', 'ஒன்­பது ரூபாய் நோட்டு', 'சொல்ல மறந்த கதை' உள்­ளிட்ட அவ­ரது படங்­கள் அனைத்­துமே என்னை கவர்ந்­தவை. அனை­வ­ரும் இந்­தப் படைப்­பு­க­ளைப் பார்த்து ரசிக்க வேண்­டும்.

"மீண்­டும் நல்ல குடும்­பப் படத்தை உரு­வாக்கி உள்­ளார் தங்­கர் பச்­சான். அவ­ரு­டன் மீண்­டும் இணைந்து பணி­யாற்ற வேண்­டும். இந்­தப் பய­ணம் நீடிக்க வேண்­டும் என்று விரும்­பு­கி­றேன். அவர் வேக­மாக மட்­டு­மல்ல, கோபத்­து­ட­னும் பணி­யாற்­று­வார்.

"அதன் முடி­வில் தர­மான படைப்பு உரு­வா­கும் என்­ப­தில் சந்­தே­கமே இல்லை. இப்­ப­டத்­தில் இறு­திக்­காட்சி வரை என் பங்­க­ளிப்பு இருக்­கும். எனது பாத்­தி­ரம் நகைச்­சு­வை­யாக அமைக்­கப்­பட்­டுள்­ளது," என்­கி­றார் யோகி­பாபு.