யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களும் கதாபாத்திரங்களும்தான் தமக்குப் பிடித்தமானவை என்கிறார் பிரியா பவானி சங்கர்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே திரையுலகில் தாம் நடிப்பதற்கான முதன்மைக் காரணமாக இருந்தது என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழில் நடிக்க வந்தபோது எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றும் கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன்," என்கிறார் பிரியா.
இப்போது தெலுங்கில் குடும்ப கதையுடன் உருவாகும் படத்தில் நடித்து வருகிறாராம். வேலைக்குப் போகாத கணவன், வேலைக்குச் செல்லும் மனைவி ஆகியோர் இடையே நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக அப்படம் உருவாகிறதாம்.
"சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்களும்கூட திரைத்துறையில் தங்களை நிரூபிக்க கடுமையாக உழைக்கிறார்கள், போராடுகிறார்கள்.
"அதையெல்லாம் பார்க்கும்போது நானும் அதிகம் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வலுக்கிறது," என்று சொல்லும் பிரியா பவானி சங்கர் விரைவில் ஊதியத்தை உயர்த்த உள்ளாராம்.

