'குடி மகான்' ஆன குடிமகன்

'குடி மகான்' ஆன குடிமகன்

1 mins read
40df933d-9884-4cd1-9ffc-9317d6c99303
-

சில காலம் சின்­னத்­தி­ரை­யில் கவ­னம் செலுத்தி வந்த நடிகை சாந்­தினி மீண்­டும் வெள்­ளித்­தி­ரைக்கு திரும்பி உள்­ளார்.

'நாளைய இயக்குநர்' தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் வெற்றிபெற்ற பிர­காஷ் இயக்­கும் படம் 'குடி­ ம­கான்'.

சாந்தினி நாய­கி­யாகவும் சுரேஷ் சக்­க­ர­வர்த்தி, நமோ நாரா­ய­ணன், சேது ஆகி­யோர் முக்­கிய­ப் பாத்­தி­ரங்­களிலும் நடித்­துள்­ள­னர்.

"மதுவை மையப்­ப­டுத்தி கதையை உரு­வாக்கி உள்­ளோம் என்­றா­லும் எந்த இடத்­தி­லும் மது பழக்­கத்தை ஊக்கு­விக்­கும் வித­மாக காட்­சி­களோ வச­னங்­களோ இருக்­காது," என்­கி­றார் இயக்­கு­நர் பிர­காஷ்.

"நாம் அனை­வ­ருமே ஏதா­வது ஒரு நாட்­டின் குடி­ம­க­னாக இருப்­போம். அதே­ச­ம­யம் மது அருந்­து­வோ­ரை­யும் குடி­ம­கன் என்­று­தான் குறிப்­பி­டு­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட ஒரு குடி­ம­கன், குடிமகா­னாக இருந்­தால் எப்­படி இருக்­கும் என்­கிற கோணத்­தில் இந்த கதை உரு­வா­கி­யுள்­ளது," என்­கி­றார் சாந்­தினி.

'சித்து பிளஸ் 2' படத்­தில் அறிமு­க­மாகி பல படங்­களில் நடித்­துள்ள சாந்­தினி, சிறு­ முதலீட்டு படங்­க­ளின் ஆஸ்­தான நாய­கி­யாக வலம் வந்­தார்.