'தளபதி 67' படம் குறித்த புதுத் தகவல்களுக்காக ரசிகர்களைப் போலவே திரையுலகத்தினரும் ஆர்வமாகக் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில், அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
'தளபதி 67' படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளதாக அவரது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.
'மாஸ்டர்', 'வாரிசு' ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் விஜய்யின் மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தமாகி உள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிவிட்டது என்றும் வரும் நாள்களில் இப்படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள் குறித்த தகவலும் காணொளிப் பதிவுகளும் வெளியாகும் என தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்த லோகேஷ், விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் தனது கையில் காப்புடன் காணப்படுகிறார். எனவே இது அதிரடி சண்டைக் காட்சிகளைக் கொண்ட படமாக உருவாகும் என எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.