'பன்றிக்கு நன்றி சொல்லி', 'பருந்தாகிறது ஊர்க் குருவி' படங்களில் நாயகனாக நடித்தவர் நிஷாந்த் ரூஸோ. இவர் இப்போது நாயகனாக நடிக்கும் படத்துக்குச் 'சித்தார்த்' என்று தலைப்பு வைத்துள்ளனர். நாயகியாக ராஷ் நடிக்கிறார்.
எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாகப் புதுமுகம் ராஷ் நடிக்கிறார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜூட் ரொமாரிக் இயக்குகிறார்.
லோகநாத் சஞ்சய் ஒளிப்பதிவைக் கவனிக்க ஜேடி இசை அமைக்கிறார்.
"இது அதிரடியும் திகிலும் நிறைந்த படமாக உருவாகிறது. ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. மேலும், விழிப்புணர்வு பெறுதல் , அறிதல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
"முக்கியக் கதாபாத்திரங்களில் மேலும் பலர் நடிக்கின்றனர். தொடக்கம் முதல் இறுதிவரை அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் உருவாகிறது," என்கிறார் இயக்குநர் ஜூட் ரொமாரிக்.
சென்னை, புதுவை, ஏற்காடு பகுதிகளில் முக்கியக் காட்சிகளைப் படமாக்குகின்றனர்.

