"எனக்காக நடிகர் கவின் சிபாரிசு செய்து பட வாய்ப்பை பெற்றுத் தந்தார் என்பது உண்மைதான்," என்கிறார் இளம் நாயகி அபர்ணா தாஸ்.
'பீஸ்ட்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது 'டாடா' என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
"இதுதான் நான் நாயகியாக நடித்துள்ள முதல் தமிழ்ப் படம். இயக்குநர் கணேஷ் கேரளாவுக்கு வந்து, என்னைச் சந்தித்து கதையை விவரித்தார். கவின் இல்லையென்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. காரணம், அவர்தான் இயக்குநரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
"பொதுவாக ஒரு கதாநாயகன் தன்னுடன் நடிக்கும் நாயகிக்கு சிபாரிசு செய்தால், அதை மையப்படுத்தி பலவிதமான 'கிசுகிசு'க்கள் வெளியாகும். அவை குறித்து நான் கவலைப்படுவதாக இல்லை. அதனால்தான் கவின் செய்த உதவியை வெளிப்படையாகச் சொல்கிறேன்.
"தமிழ்த் திரையுலகில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்கான சிறந்த தொடக்கமாக இந்தப் படம் அமையும்," என்கிறார் அபர்ணா.

