'உழைப்பு தந்த வாய்ப்பு'

'உழைப்பு தந்த வாய்ப்பு'

3 mins read
2807a300-e985-4e9c-9213-ee70f7275ca3
-

குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்­த­வர்­கள் சில ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நாய­க­னாக அல்­லது நாய­கி­யாக நடிப்­ப­தும் அதைக் கண்டு ரசி­கர்­கள் வியப்­ப­டை­வ­தும் திரை­யு­ல­கில் காலங்­கா­ல­மாக நடந்து வரும் தொடர் நிகழ்வு. அவ்­வாறு ரசி­கர்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கும் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளார் அனிகா சுரேந்­தி­ரன்.

'விஸ்­வா­சம்', 'என்னை அறிந்­தால்' ஆகிய படங்­களில் அஜித்­தின் மக­ளாக நடித்த இவர், இப்­போது கதா­நா­யகி ஆகி­விட்­டார். தெலுங்­கில் உரு­வா­கி­யுள்ள 'புட்­ட­பொம்மா' படத்­தில் அனி­கா­தான் கதா­நா­யகி.

இப்­ப­டத்­தின் அறி­முக சுவ­ரொட்டி தொடங்கி இப்­போது வரை வெளி­வந்­துள்ள தக­வல்­களை ரசி­கர்­கள் தேடிப்­பி­டித்­துப் படித்து வரு­கி­றார்­கள்.

கதா­நா­ய­கி­யாக வலம் வரப்­போ­கும் அனி­கா­வுக்கு வாழ்த்­து­கள் குவிந்து வரு­கின்­றன. தன்­னைச் சுற்றி நடக்­கும் அனைத்­துமே கன­வு­போல் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் இந்த இளம் நாயகி. அதே­ச­ம­யம் தனது கடின உழைப்­பும் இந்த வெற்­றிக்­குக் கார­ணம் என அழுத்­த­மா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

"குழந்தை நட்­சத்­தி­ர­மாக எல்­லோ­ரின் மன­தி­லும் இடம்­பி­டித்­தேன். இப்­போது இன்­னொரு சிறப்பு அம்­ச­மாக கதா­நா­யகி ஆகி இருக்­கி­றேன். 'புட்­ட­பொம்மா' மலை­யா­ளத்­தில் வெளி­யான 'கப்­பெலா' படத்­தின் தெலுங்கு மறு­ப­திப்பு ஆகும்.

"எனக்கு இந்த வாய்ப்பை அளித்த படக்­கு­ழு­வுக்கு நன்றி. இது நான் எதிர்­பார்க்­காத ஒரு வாய்ப்பு. எனி­னும், எனது திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்தி, எனது தேர்வு நியா­ய­மா­னது என்­பதை நிலை­நி­றுத்­து­வேன்," என்­கி­றார் அனிகா.

இப்­ப­டத்­தில் ஒப்­பந்­த­மான வேளை­யில் தெலுங்­கில் பேசு­வ­தற்கு மிக­வும் சிர­மப்­பட்­டா­ராம். அப்­போது படக்­கு­ழு­வில் இருந்த சிலர் ஒவ்­வொரு வார்த்­தை­யா­கச் சொல்­லிக்­கொ­டுத்து பேச வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

"ஒவ்­வொரு தெலுங்கு வார்த்­தைக்­கும் சரி­யான அர்த்­தத்­தைச் சொல்­லிக் கொடுத்­த­னர். மிக முக்­கி­ய­மான வார்த்­தை­களை எவ்­வாறு உச்­ச­ரிக்க வேண்­டும் என்­றும் பேசிக்­காட்­டி­னர்.

"அவர்­கள் இல்லை என்­றால் இந்­தப் படத்­தில் நான் இல்லை என்­பதே உண்மை," என்­கி­றார் அனிகா.

உச்­ச­ரிப்பு என்­பது திரைத்­து­றை­யில் மிக முக்­கி­ய­மான அம்­சம் என்று குறிப்­பி­டு­ப­வர், வச­னங்­க­ளின் அர்த்­தத்தை உள்­வாங்கி, நல்ல உச்­ச­ரிப்­பு­டன் பேசி­னால்­தான் ரசி­கர்­க­ளின் மனதை நெருங்க முடி­யும் என்­கி­றார்.

"சிறு வயது முதலே எனக்கு நடிப்­பில் ஆர்­வம் அதி­கம். அஜித், நயன்­தாரா, மம்தா மோகன்­தாஸ் போன்ற முன்­னணி நடி­கர், நடி­கை­க­ளோடு பணியாற்­றி­யதை எனது அதிர்ஷ்­ட­மா­கக் கரு­து­கி­றேன்.

"நிறைய சாதித்­துள்ள கலை­ஞர்­க­ளி­டம் இருந்து திரைத்­துறை சார்ந்த ஏரா­ள­மான விஷ­யங்­களை, நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். அவர்­கள் எல்­லாம் உயர்ந்த நிலைக்­குச் சென்­று­விட்ட போதி­லும்­கூட இன்­ற­ள­வும் தன்­ன­டக்­கத்­து­டன் காணப்­ப­டு­கி­றார்­கள்.

"ஏதோ இப்­போ­து­தான் முதல் படத்­தில் நடிப்­ப­து­போல் உழைத்­துக்­கொண்டே இருக்­கி­றார்­கள். மீண்­டும் மீண்­டும் தங்­கள் திற­மையை வெளிப்­ப­டுத்­த­வும் நிரூ­பிக்­க­வும் அவர்­கள் மேற்­கொள்­ளும் முயற்­சி­க­ளைப் பார்க்­கும்­போது, 'நாம் எல்­லாம் ஒன்­றுமே இல்லை' என்று நினைக்­கத் தோன்­று­கிறது," என்­கி­றார் அனிகா.

திரை­யு­ல­கில் புதிய தொழில்­நுட்­பங்­கள் அறி­மு­க­மா­வதை வர­வேற்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், ஓடிடி தளங்­கள் மூலம் திரை­யு­ல­கம் வளர்ச்சி பெறும் என்­கி­றார்.

ஒரு படத்­துக்கு திரை­ய­ரங்­கு­களில் கிடைக்­கும் வர­வேற்பு ஓடிடி தளங்­க­ளி­லும் கிடைப்­ப­தா­கச் சொல்­லும் இவர், உணர்­வு­பூர்­வ­மான பட­பங்­களில் நடிப்­ப­தையே விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"திரை­ய­ரங்கு சென்று படம் பார்ப்­பது அலா­தி­யான அனு­ப­வம் என்­பதை ஒப்­புக்­கொள்­கி­றேன்.

"அதே­ச­ம­யம் வசூல் ரீதி­யி­லும், உல­கின் கடைக்­கோடி ரசி­கர்­க­ளை­யும் சென்­ற­டை­யும் என்ற தொழில்­நுட்­பத்­தின் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போ­தும் ஓடிடி தளங்­கள் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன," என்­கி­றார் அனிகா.

இரண்டு தமிழ்ப் படங்­களில் நடிப்­பது குறித்து இவர் பேச்சு வார்த்தை நடத்தி வரு­கி­றா­ராம்.