நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவர உள்ளது.
'ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்' என்ற தலைப்பில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் அனைத்தையும் தீரஜ்குமார் என்பவர் தொகுத்துள்ளார்.
இத்தகவலை மும்பையில் வெளியிட்ட மறைந்த நடிகையின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி என்றார்.
"தனது கலையை திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர் மகிழ்ச்சி அடைந்தார். அதேசமயம், தனிமை விரும்பியாகவும் இருந்தார்.
"தீரஜ்குமார் நல்ல ஆய்வாளர், சிறந்த எழுத்தாளர். அவரைத் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஸ்ரீதேவி கருதினார்," என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

