சர்ச்சை நடிகர் என்று குறிப்பிடப்படும் பயில்வான் ரங்கநாதன் (படம்) தன்னை மூன்று நடிகைகள் காதலித்ததாகக் கூறியுள்ளார்.
மூன்று பேரும் தன்னை ஒருதலையாகக் காதலித்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆனால் நடிகைகளைத் திருமணம் செய்ய என் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் எனது 32வது வயதில் பெற்றோர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்.
"நடிகையைத் திருமணம் செய்திருந்தால் என் பெற்றோரை இழந்திருப்பேன். மேலும், சமுதாயத்தில் எனக்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்காது. இன்று சமுதாயத்தில் எனக்கு மரியாதை உள்ளது," என்றார் பயில்வான் ரங்கநாதன்.
நடிகைகள் குறித்து தாம் வெளியிடும் தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும் அவற்றுக்குரிய ஆதாரங்கள் உள்ளது என்றும் அவர் கூறிஉள்ளார்.

