'எளிய மனிதன் ருத்ரன்'

'எளிய மனிதன் ருத்ரன்'

3 mins read
f697eb9d-d8cc-47ce-8feb-443178ddbb38
-

"இது­வரை நான் நடித்­தி­ராத வித்­தி­யா­ச­மான கதா­பாத்­திரத்­தில் நடிக்­கும் வாய்ப்பு 'ருத்­ரன்' படம் மூலம் கிடைத்­துள்­ளது. ஓர் எளிய மனி­த­னின் வாழ்க்­கை­யில் ஏற்­படும் பிரச்­சி­னை­கள் குறித்­தும் அவற்­றால் ஏற்­ப­டக்­கூ­டிய சிர­மங்­கள் குறித்­தும் இந்­தப் படம் விவ­ரிக்­கிறது.

"அனைத்­தை­யும்­விட, சிக்­கல்­களில் இருந்து அவன் எப்­ப­டித் தப்­பிக்­கி­றான் என்­பதை சுவா­ர­சி­யமாக காட்சிப்­ப­டுத்தி உள்­ளார் இயக்­கு­நர்," என்று பாராட்டு­கி­றார் ராகவா லாரன்ஸ்.

'காஞ்­சனா' படத்துக்­குப் பிறகு லாரன்­சும் சரத்­குமாரும் மீண்­டும் இணைந்­துள்ள படம் இது.

தனு­ஷின் 'பொல்­லா­த­வன்', 'ஆடு­க­ளம்', 'நய்­யாண்டி', அருள்­நி­தி­யின் 'டைரி' உட்­பட பல படங்­களைத் தயா­ரித்த எஸ்.கதி­ரே­சன் இந்­தப் படத்­தின் மூலம் இயக்­கு­ந­ராகி உள்­ளார்.

"எனக்கு ராகவா லாரன்சை நான்­கைந்து ஆண்­டு­க­ளா­கத்­தான் தெரி­யும். குறு­கிய கால­கட்­டத்­தில் எனக்­குள் ஒளிந்­தி­ருந்த இயக்­கு­ந­ரைக் கண்­டு­பி­டித்­துள்­ளார். அவர் எல்­லா­ரை­யும் தேடிச்­சென்று உதவு­வார் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். நட்­பை­யும் உயர்­வாக மதிக்கக் ­கூடி­ய­வர் என்­பதை நேரில் பார்த்­தி­ருக்­கி­றேன்.

"திடீ­ரென ஒரு­நாள் என்னை அழைத்து இரு­வ­ரும் இணைந்து பணி­யாற்­று­வோம் என்­றார். நான் தயார் செய்து வைத்­தி­ருந்த 'ருத்ரன்' கதை­யைச் சொன்­ன­போது வியந்­தார்.

"என்­னி­டம் இருந்து இப்­ப­டிப்­பட்ட கதையை அவர் எதிர்­பார்க்க­வில்லை. அறி­முக இயக்­கு­ந­ராக நினைக்­கா­மல், எனக்­காக சில சம­ர­சங்­க­ளைச் செய்து­கொண்டு நடித்து முடித்­துள்­ளார் லாரன்ஸ்.

"இவ­ரை­யும் சரத்­கு­மா­ரை­யும் ஒன்­றாக வைத்து படப்­பி­டிப்பை நடத்­தி­ய­போது பட­ப­டப்­பாக இருந்தது. ஆனால் இரு­வ­ரும் எனது பதற்­றத்­தைப் போக்கி, சிறப்பாக நடித்து ஒத்­து­ழைத்­த­னர். நல்ல மனி­தர்­க­ளின் அன்­பால் எதை­யும் சாதிக்க முடி­யும்," என்கி­றார் இயக்­கு­நர் கதி­ரே­சன்.

ஏற்­கெ­னவே தனுஷை வைத்து படங்­க­ளைத் தயா­ரித்து இருப்­ப­தால், இயக்­கு­ந­ரான பிறகு தனுஷை வைத்­து­தான் கதி­ரே­சன் படம் இயக்­கு­வார் என்று அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­கள் நினைத்­திருந்­த­ன­ராம். ஆனால் தாமே எதிர்­பா­ராத வகை­யில் லாரன்­ஸு­டன் கைகோத்­துள்­ள­தாகச் சொல்­கி­றார்.

"வாழ்க்­கை­யில் நாம் எப்­போ­துமே ஏதேனும் ஓர் இலக்கை நோக்கி ஒடிக்­கொண்­டி­ருப்­போம். ஆனால் அதற்­கும் அப்­பாற்­பட்ட சில விஷ­யங்­கள் நடக்­கும். அப்­ப­டித்­தான் இயக்­கு­ந­ராகி உள்­ளேன்," என்­கி­றார் கதி­ரே­சன்.

ஓர் உண்­மைச் சம்­ப­வத்தை மைய­மாக வைத்து 'ருத்­ரன்' கதை உரு­வாகி உள்­ளது. பிரச்­சி­னை­க­ளால் துரத்­தப்­படும் கதா­நா­ய­கன் ருத்­ர­னாக லாரன்ஸ் அசத்தி உள்­ளா­ராம்.

"கடந்த 1980களில் பிறந்­த­வர்­கள் முதல் இன்­றுள்ள இளை­யர்­கள் வரை அனை­வ­ரும் ரசிக்­கும் பட­மாக இருக்க வேண்­டும் என விரும்­பி­னோம். அதற்­கேற்ப திரைக்­கதை அமைத்து அசத்தி உள்­ளார் கதி­ரே­சன். தனிப்­பட்ட வகை­யில் இது எனக்கு மிக­வும் பிடித்­த­மான படம்," என்­கி­றார் லாரன்ஸ்.

படத்­தின் நாயகி பிரியா பவானி சங்­கர் வழக்­கம்­போல் இயல்­பாக நடித்­துள்­ளா­ராம். நாய­கனின் தந்­தை­யாக நாசர், தாயாக பூர்ணிமா பாக்­ய­ராஜ், சரத் லோகி­தாஸ், காளி­வெங்­கட் என்று பல தெரிந்த முகங்­கள் உள்­ளன.

ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைத்­துள்­ளார். பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரை­யில் ஒலித்த 'பாடாத பாட் டெல்­லாம் பாட வந்­தாள்' பாடலை ரீமிக்ஸ் செய்­துள்ளனராம்.

சென்னை, கோவை, பொள்­ளாச்சி, ஹைத­ரா­பாத், லண்­டன் எனப் பல்­வேறு இடங்­களில் முக்­கிய காட்சி­க­ளைப் பட­மாக்கி உள்­ள­னர்.

"சரத்­கு­மார் 'காஞ்­சனா' படத்­தில் மிரட்­ட­லாக நடித்­தி­ருப்­பார். ஏறக்­கு­றைய பன்­னி­ரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு லாரன்ஸ் உடன் மீண்­டும் இணந்­துள்­ளார். 'தனி ஒரு­வன்' அர­விந்த்­சாமி, 'இரும்புத்­திரை' அர்­ஜுன் போன்று இப்­ப­டத்­தில் சரத் சாரின் தோற்­ற­மும் நடிப்­பும் வித்­தி­யா­ச­மாக இருக்­கும்.

"இது வெவ்­வேறு காலக்­கட்­டங்­களில் நடக்­கும் கதை என்­ப­தால் சரத்­கு­மா­ரின் தோற்ற­மும் மாறிக்­கொண்டே இருக்­கும். அவ­ரும் லாரன்­சும் மோதும் சண்­டைக்­காட்­சி­கள் ரசி­கர்­களை மிரள வைக்­கும். அந்த அள­வுக்கு இரு­வ­ரும் கடுமை­யாக உழைத்­துள்­ள­னர்," என்று சொல்­லும் கதி­ரே­சன், தொடர்ந்து திரைப்­ப­டங்­க­ளைத் தயா­ரிக்க உள்­ளார்.

அடுத்து வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் லாரன்ஸ் நாய­க­னாக நடிக்­கும் 'அதிகாரம்' படத்தை இயக்க உள்­ளார் கதி­ரே­சன்.

, :

தமிழகத்  