தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதீப்: கேலி செய்தனர்

1 mins read
22ad2984-7b78-4618-93fd-a332e64ae688
-

கதா­நா­ய­க­னாக நடித்து வெற்­றி­பெற முடி­யாது எனப் பல­ரும் தமது முகத்­துக்கு நேராக கூறி­ய­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் பிர­தீப் ரங்­க­நா­தன்.

'லவ் டுடே' படத்­தின் வெற்றி விழா­வில் பேசிய அவர், கதா­நா­ய­க­னாக நடிக்­கும் படம் தோல்வி அடைந்­தால், அதி­லிருந்து தம்­மால் மீளவே இயலாது எனப் பல­ரும் எச்­ச­ரிக்கை விடுத்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

"கதா­நா­ய­க­னாக நடிக்க நான் தயங்­க­வில்லை. நல்ல கதைக்­களம் வெற்­றி­பெ­றும் எனு உறு­தி­யாக நம்­பி­னேன். நீ ஏன் கதா­நா­ய­க­னாக நடிக்­கி­றாய் என்­றும் கேட்­ட­னர். படம் தோற்று கீழே விழுந்­தால் திரும்ப எழு­வது கஷ்டம் என்று சிலர் கேலி பேசி­ய­தைப் பொருட்­ப­டுத்­த­வில்லை. மலை ஏற, மற்ற உபகரணங்களை விட, மலைதான் முக்கியம் என்று கருதினேன்," என்றார் பிரதீப்.