தனுஷ், ஐஸ்வர்யா இடையே மறைமுக மோதல்

தனுஷ், ஐஸ்வர்யா இடையே மறைமுக மோதல்

2 mins read

கருத்து வேறு­பா­டு­கள் கார­ண­மாகப் பிரிந்து வாழும் நடி­கர் தனுஷுக்­கும் அவ­ரது முன்­னாள் மனை­வி­யான ஐஸ்­வர்யா ரஜினிக்கும் இடையே மறை­முக மோதல்­கள் நீடித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'வாத்தி' படம் வெளி­யாகி உள்ள நிலை­யில், அருண் மாதேஸ்­வ­ரன் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'கேப்­டன் மில்­லர்' படத்­தில் நடிக்க உள்­ளார் தனுஷ்.

இந்­நி­லை­யில், மீண்­டும் ஒரு படத்தை இயக்­கு­வ­தற்­கான பணி­க­ளை­யும் அவர் தொடங்கி உள்­ளா­ராம். அவ­ரது இயக்­கத்­தில் வெளி­யான 'பா.பாண்டி' படத்துக்கு விமர்­சன ரீதி­யில் பாராட்­டு­கள் கிடைத்­தன.

இதை­ய­டுத்து விஷ்ணு விஷாலை நாய­க­னாக வைத்து ஒரு படத்தை இயக்க தனுஷ் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது­தான் அவ­ரது முன்னாள் மனை­வி­யு­ட­னான மறை­முக மோத­லுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ள­தாம்.

ஐஸ்­வர்யா தற்­போது திரை­யு­ல­கம் சார்ந்த பணி­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார். அந்த வகை­யில் கிரிக்­கெட் விளை­யாட்டை மைய­மாக வைத்து, அவர் இயக்கும் படத்­துக்கு 'லால் சலாம்' எனத் தலைப்பு வைக்­கப்­பட்­டுள்ளது.

லைகா நிறு­வ­னம் தயா­ரிக்­கும் இந்­தப் படத்­தில் ரஜி­னி­காந்த் சிறப்பு வேடத்­தில் நடிக்க உள்ளார். இது தொடர்­பான அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பும் அண்­மை­யில் வெளி­யா­னது.

இந்­தப் படத்­தில் அதர்வாதான் முத­லில் நாய­க­னாக ஒப்­பந்­த­மானார். சில கார­ணங்­க­ளால் அவர் வில­கி­யதை அடுத்து விஷ்ணு விஷால் இப்­ப­டக்­குழுவுடன் இணைந்­தார்.

இந்­நி­லை­யில், தனு­ஷும் தன் படத்­தில் நடிக்க விஷ்­ணுவை ஒப்­பந்­தம் செய்­துள்­ளார்.

இதற்­கி­டையே, 'லால் சலாம்' படப்­பி­டிப்­பின்­போது விஷ்­ணு­, ஐஸ்வர்­யா­வுக்­கு இடையே கருத்து வேறு­பா­டு­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அதன் கார­ண­மாக அந்­தப் படத்­தில் இருந்து விலக விஷ்ணு முடிவு செய்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், விஷ்ணு எடுத்­துள்ள முடி­வின் பின்­ன­ணி­யில் தனுஷ் இருக்­க­லாம் என்­றும் சில ஊட­கங்­கள் கிசு­கிசு வெளி­யி­டு­கின்­றன. ஆனால் தனுஷ் இது குறித்­தெல்­லாம் கண்­டு­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

விஷ்ணு சம்­ம­திக்­கும் பட்சத்தில் தனது இயக்­கத்­தில் உரு­வா­கும் படத்­தில் அவர்­தான் நாய­கன் என்று அறி­விக்க திட்­ட­மிட்­டுள்­ளார். இல்­லை­யெ­னில் வேறு நடி­கரை அணு­கு­வதே அவரது திட்­ட­மாம்.

அதே­போல் தனது படத்­தில் இருந்து விஷ்ணு வில­கும் பட்­சத்­தில் வேறு கதா­நா­ய­கனை அணுகு­வது என்­பதே ஐஸ்­வர்­யா­வின் முடி­வாம்.