'மறக்க இயலா நாள்கள்'

'மறக்க இயலா நாள்கள்'

3 mins read

'வாத்தி' படத்­தில் தனு­ஷு­டன் இணைந்து நடித்­தது மறக்க முடி­யாத அனு­ப­வம் என்­கி­றார் நடிகை சம்யுக்தா. இப்­ப­டத்­தில் மீனாட்சி என்ற ஆசிரியை கதா­பாத்­தி­ரத்­தில் இயல்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்தி தமிழ் சினிமா ரசிகர்­களின் பாராட்­டு­க­ளைப் பெற்­றுள்­ளார்.

படப்­பி­டிப்­பின்­போது தமது பள்ளி நாள்­களை மன­தில் அசை­போட்­ட­தா­க­வும் சொல்­கி­றார் சம்­யுக்தா.

"நம் ஒவ்­வொ­ரு­வர் வாழ்க்­கை­யிலும் பள்­ளிக்­கா­லம் மிக ஆனந்­த­மான, அழ­கான காலம் என்­பேன். என் பள்ளி நாள்­களை இன்­னும் மறக்­க­வில்லை.

"எனக்­குப் பாடம் நடத்­திய ஆசி­ரி­யர்­களில் பெரும்­பா­லா­னோரை இன்­னும் நினை­வில் வைத்­துள்­ளேன். அவர்கள் எப்­ப­டிப் பேசு­வார்­கள், பாடம் நடத்­து­வார்கள், அவர்­க­ளு­டைய உடல்­மொழி என அனைத்­தும் எனக்கு அத்­துப்­படி.

"அவர்­க­ளைப் பார்த்து நான் தெரிந்துகொண்­டவை, கற்­றவை ஆகி­ய­வற்­றின் உத­வி­யோ­டு­தான் 'வாத்­தி­'யில் நடித்­தேன்.

"அதனால்தான் எனது நடிப்பு இயல்­பாக இருந்­ததாக ரசி­கர்­களும் விமர்­ச­கர்­களும் பாராட்டு­கி­றார்­கள்," என்று சொல்­லும் சம்யுக்தா, வணி­கப் படங்­க­ளில்­தான் அதிக கவ­னம் செலுத்­து­வ­தாக விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

அதை தாம் மறுக்­க­வில்லை என்று குறிப்­பி­டும் அவர், திரை­யு­ல­கில் தனது பய­ணத்­துக்­கான ஒவ்­வொரு அடி­யை­யும் மிகுந்த கவ­னத்­து­டன் எடு்த்து வைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"எனது திரை­யு­ல­கப் பய­ணத்­தின் முக்­கி­ய­மான காலக்­கட்­டத்­தில் உள்­ளேன். இப்­போது நான் புது­மு­கம் அல்ல. அதே­ச­ம­யம் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான படங்­களில் நடித்து முடித்­துள்ள அனு­பவ நடிகை என்­றும் சொல்ல இய­லாது.

"எனது பய­ணத்­தின் பாதி தூரத்தை எட்­டிப்­பி­டிக்க உள்­ளேன் என்­ப­து­தான் உண்மை. இது­போன்ற சூழ­லில் எனக்­கான கதை­யை­யும் கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் தேர்ந்­தெடுக்கும் தகுதி எனக்கு வந்­து­விட்­ட­தா­கக் கரு­த­வில்லை.

"தனிப்­பட்ட வாழ்க்கை என்று வரும்­போது நாமே சிந்­தித்து முடி­வெடுக்­க­லாம். நமக்கு ஒத்­து­வ­ரக்­கூடிய வேகத்­தில் முன்­னே­றிச் செல்ல­லாம்.

"ஆனால் தொழில் என்று வரும்­போது இது­போன்ற வேகத்தைக் கடைப்­பி­டிக்க முடி­யாது. கொஞ்­சம் நிதா­னம் தேவை," என்று முதிர்ச்­சி­யுடன் பேசு­கி­றார் சம்­யுக்தா.

நாய­கி­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­களில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை தனக்­கும் இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அது­போன்ற வாய்ப்­பு­கள் இப்­போ­து­தான் தன்­னைத் தேடி­வ­ரத் தொடங்­கி­யுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"தனி நாய­கி­யாக நடிக்க விருப்­பம் உள்­ளது. ஆனால் இவ்­வி­ஷ­யத்­தில் என்­னால் அவ­ச­ரப்­பட இய­லாது.

"நல்ல கதை­யும் கதைக்­க­ள­மும் அமைய வேண்­டும் என்­ப­து­டன், அப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தால் வெற்­றி­பெற முடி­யும் என்ற நம்­பிக்­கை­யும் ஏற்பட வேண்­டும்.

"தனி நாய­கி­யாக நடிப்­பது மிகப்­பெ­ரும் பொறுப்பு. வணிக ரீதி­யி­லான படங்­களில் நடிக்­கும் கதா­நா­ய­கர்­கள் மீது எனக்குப் பெரும் மரி­யாதை உண்டு. கார­ணம், அந்­தப் படத்­தின் வெற்­றிக்­காக கடு­மை­யாக உழைத்து, பொறுப்பைச் சுமப்­பது அந்த கதா­நா­ய­கர்­கள்­தான்.

"அவர்­க­ளால் மிகப்­பெ­ரும் ரசி­கர் கூட்­டத்தை திரை­ய­ரங்­குக்­குப் படை­யெ­டுத்து வர­வ­ழைக்க முடிகிறது," என்­கி­றார் சம்­யுக்தா.

ஒரு படத்­தில் பணி­யாற்­றும் அனை­வ­ரும் மன­தார தங்­க­ளு­டைய உழைப்பை வெளிப்­ப­டுத்­தும்­போது அப்படம் நிச்­ச­யம் வெற்­றி­பெ­றும் என்று குறிப்­பி­டு­ப­வர், இது­போன்ற வெற்­றி­களைத் தாம் கண்­கூ­டா­கப் பார்த்­த­துண்டு என்­கி­றார்.

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் எனப் பல மொழி­களில் நடிப்­பது உற்­சா­கம் அளிப்­ப­தா­க­வும் அனைத்து திரை­யு­ல­கங்­க­ளி­லும் பட உரு­வாக்­கப் பணி­கள் ஒரே மாதி­ரி­யா­கத்­தான் உள்­ளன என்­றும் சொல்­கி­றார்.

"நான் விரும்­பி­ய­படி பெய­ரும் புகழும் கிடைத்து வரு­கிறது. ஆனால் இவற்­றுக்­கான விலை­யாக நமது தனிமையை இழக்க நேரி­டும். அவ்­வப்­போது இந்­தப் புக­ழும்­கூட மன­தில் சலிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­டும். அது­போன்ற தரு­ணங்­களில் இருந்து மீண்டுவர வேண்­டும் எனில் புகழ் வெளிச்­சத்­தில் இருந்து சில காலம் மாய­மா­கி­விட வேண்­டும். இதைத்­தான் நான் பின்­பற்றி வரு­கி­றேன்.

"சில நடிகைகள் ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது, பயணங்கள் மேற்கொள்வது என சோர்வில் இருந்து மீண்டு வருவதற்கு, பல்வேறு வழிமுறை களைக் கையாள்வதை அறிவேன். எனக்குத் தனிமைதான் நல்ல தீர்வாக அமைகிறது.

"ஒருசிலரைப் போன்று சமூக ஊடகங்களில் கவனம் செலுத்துவதிலும் எனக்கு விருப்பம் இல்லை. என் வாழ்க்கையில் எளிமையைக் கடைப்பிடிக்க விரும்புகிறேன். ஏனெனில் எளிமையும் தனிமையும் வாழ்க்கையில் பல்வேறு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. ," என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் இளம் நாயகி சம்யுக்தா.