தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரக்க குணம் கொண்டவர்: ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

3 mins read
576a361a-1a4d-4a02-a360-4e8a9b443cac
-

தமிழ்த் திரை­யு­ல­கின் முன்­னணி நகைச்­சுவை, குணச்­சித்­திர நடி­கர் மயில்­சாமி (படம்) நேற்று கால­மானார். அவ­ருக்கு வயது 57. திடீர் மார­டைப்­பால் அவர் உயி­ரி­ழந்­த­தாக தெரிய வந்துள்ளது.

சென்னை சாலி­கி­ரா­மம் பகு­தியில் வசித்து வந்­தார் மயில்சாமி. நேற்று காலை அவ­ருக்கு திடீர் மார­டைப்பு ஏற்­பட்­டதை அடுத்து, அரு­கில் உள்ள ராம­ச்சந்­திரா மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். எனி­னும், அவ­ரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் அவர் முன்பே இறந்­து­விட்­ட­தாகத் தெரி­வித்­த­னர். மயில்­சா­மி­யின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகத்தினரை பெரும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

தமி­ழ­கத்­தின் ஈரோடு மாவட்­டத்­தில் உள்ள சத்­தி­ய­மங்­க­லம் பகு­தி­யில் பிறந்­த­வர் மயில்­சாமி.

கடந்த 1984ஆம் ஆண்டு, கே.பாக்­ய­ராஜ் இயக்­கிய 'தாவணிக் கன­வு­கள்' படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மானார் மயில்­சாமி. அடுத்த ஆண்­டி­லேயே 'கன்­னி­ராசி' படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தார்.

'என் தங்­கச்சி படிச்­சவ', 'அபூர்வ சகோ­த­ரர்­கள்', 'வெற்றி விழா' எனப் பல்­வேறு படங்­களில் குறிப்­பி­டத்­தக்க கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கத் தொடங்­கி­னார்.

பெரிய கதா­பாத்­தி­ரங்­கள் அமை­யா­விட்­டா­லும் ரசி­கர்­கள் தன்னை திரை­யில் அடை­யா­ளம் காணக்­கூ­டிய வகை­யில் கதா­பாத்­தி­ரம் அமைந்­தால் போதும் என்­றும் ஒரே­யொரு நிமி­டம் வரக்கூடிய கதா­பாத்­தி­ரத்­தின் மூல­மா­க­வும்­கூட ரசி­கர்­க­ளைக் கவர முடி­யும் என்­றும் அடிக்­க­டி சொல்­வார் மயில்­சாமி.

திரைப்­ப­டங்­களில் நடித்­த­படியே நிகழ்ச்சித் தொகுப்­பா­ளர், சமூக ஆர்­வ­லர் எனப் பல்­வேறு தளங்­களில் கால்­ப­தித்து சாதித்த மயில்­சாமி, தனது மன­தில்­பட்ட கருத்து­களை வெளிப்­ப­டை­யா­கப் பேசக்­கூ­டி­ய­வர். திரை­யு­ல­கம் சார்ந்த சர்ச்­சை­கள், சமூ­கம் சார்ந்த விவ­கா­ரங்­களில் இவர் எத்­த­ரப்­பை­யும் சாரா­மல் நடு­நி­லை­யு­டன் தெரி­வித்த கருத்­து­க­ளுக்கு பலத்த வர­வேற்பு கிடைத்­தது.

சுமார் இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட படங்­களில் நகைச்­சுவை, குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ளார் மயில்­சாமி. கடை­சி­யாக 'உடன்­பால்' எனும் ஒரு படத்­தில் நடித்­தார். 'மர்ம தேசம்' தொலைக்­காட்­சித் தொட­ரில் நடித்­துள்­ளார் மயில்­சாமி. மேலும், ஒரு தொலைக்­காட்சி நிகழ்ச்­சியைத் தொகுத்து வழங்கவும் செய்தார். 'அசத்த போவது யாரு', 'சிரிப்போ சிரிப்பு' உள்­ளிட்ட நகைச்­சுவைப் போட்டி நிகழ்ச்­சி­க­ளுக்கு நடுவரா­க­வும் செயல்­பட்­டுள்­ளார்.

தொடக்க காலங்­களில் பல­குரல் மன்­ன­னாக விளங்­கி­ய­வர் மயில்­சாமி. அவ­ரது 'மிமிக்ரி' நிகழ்ச்­சி­கள் இளை­யர்­களை வெகு­வாகக் கவர்ந்­தன. மிகுந்த இரக்க குணம் கொண்ட அவர், ஏரா­ள­மானோருக்கு பொரு­ளா­தார ரீதி­யில் உதவி செய்­துள்­ளார். அவ­ரது இரக்க குணத்தை விவேக் பல­முறை நெகிழ்ந்து பாராட்டி உள்­ளார். ஒரு­முறை தமி­ழக சட்டப்­பே­ர­வைத் தேர்­த­லில் சுயேச்சை­யா­க­வும் போட்­டியிட்டுள்­ளார்.

தமிழ்த் திரை­யு­ல­கில் கோலோச்­சிய விவேக், வடி­வேலு ஆகிய இரு­வ­ரு­ட­னும் நெருக்­க­மாக இருந்த மயில்­சாமி, இரு­வ­ரது படங்­க­ளி­லும் நடித்து வந்­தார்.

விவேக் மறைந்­த­போது பெரி­தும் மன­முடைந்து போன மயில்­சாமி, 'மனித வாழ்க்கை என்­பது இவ்­வ­ள­வு­தான், புரிந்­து­கொள்­ளுங்­கள்' என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

"விவேக் போன்ற பெரும் கலை­ஞர்­கள் எக்­கா­ல­மும் நம்­முடன் இருப்­பார்­கள். அவர்­கள் நடித்­துச் சென்ற திரைப்­ப­டங்­கள் பொக்­கி­ஷங்­க­ளாக நம்­மு­டன் இருக்­கும். அப்­ப­டிப்­பட்ட கலை­ஞர்­க­ளின் இழப்பை எண்ணி வருந்­து­வ­தை­விட, அவர்­க­ளின் புகழ்­பாடி பெருமை சேர்க்க வேண்­டும்," என்­றும் மயில்­சாமி கூறி­யிருந்­தார்.

இப்­போது, அந்த வரி­கள் மயில்­சா­மிக்­கும் பொருத்­த­மாக இருப்­ப­தாக அவ­ரது ரசி­கர்­கள் சமூக ஊட­கங்­களில் கண்­ணீர் அஞ்­சலி செலுத்தி வரு­கின்­ற­னர்.