தனது திருமண வாழ்க்கை குறித்து சிலர் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்புவது வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார் ஹன்சிகா மோத்வானி.
திரையுலகில் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தார் சிறு வயதில் தனக்கு 'ஹார்மோன்' ஊசிகள் செலுத்தியதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் திருமணம் செய்துகொண்ட சோஹைல் எனது தோழியின் கணவர் என்றும் அவர்கள் குடும்பத்தை உடைத்து துரோகம் செய்துவிட்டதாகவும் பலர் என்னை மோசமாக பேசினர். அது என் குற்றமல்ல. எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.
"நான் பொது வாழ்க்கையில் இருப்பதால் என்னை வில்லியைப்போல் சித்திரிப்பது எளிதான காரியம். இது நான் பிரபலமாக இருப்பதற்கு கொடுக்கும் விலை," என்கிறார் ஹன்சிகா மோத்வானி.

