'எழுத்தாளராக விரும்புகிறேன்'

'எழுத்தாளராக விரும்புகிறேன்'

1 mins read
1dc1e639-3c5a-4b98-9156-9b85740d9219
-

'96' படத்­துக்­கான நடிப்­புத் தேர்வு நடை­பெற்­ற­போது 11ஆம் வகுப்பு படித்­துக் கொண்­டி­ருந்­தா­ராம் கௌரி கிஷன் (படம்). எதிர்­பா­ராத வித­மாக அந்­தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நடிகை­யாக மாறி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

திரை­யு­ல­கில் பெண் எழுத்­தா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும்­போது, நாய­கியை முன்­னி­லைப்­ப­­டுத்­தும் படங்­களின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கும் என்­றும் தமக்கும் எழுத்­தா­ள­ராக வேண்­டும் என்ற விருப்­பம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

"நடி­கை­யாக வேண்­டும் என ஆசைப்­பட்­டதே இல்லை. ஆனால் இன்று நல்ல நடிகை என்று பெயர் வாங்­கு­வ­தற்­காக முயற்சி செய்­கி­றேன். மேலும், எழுத்­தா­ள­ராக வேண்­டும் என்­ப­தற்­காக வித்­தி­யா­ச­மான கதை­களை எழு­தும் முயற்­சி­யை­யும் தொடங்கி உள்­ளேன்.

"நான் பார்ப்­ப­தற்கு சமந்­தா வைப் போல் இருப்­ப­தா­கச் சிலர் சொல்­கி­றார்­கள். அதைக் கேட்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது.

"சமந்தா திரையுலகில் பல சாதனைகளைப் புரிந்தவர். நானும் அவ­ரைப் போல் பல்­வேறு மொழி­களில் நடித்து திற­மையை நிரூ­பிக்க வேண்­டும் என ஆசைப்­படு­கி­றேன்," என்­கி­றார் கௌரி கிஷன்.

தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக் கும் இவர், ஒரு படத்தில் தனி நாயகியாகவும் நடிக்கிறாராம்.