வெற்றி நடிப்பில் ஒரே இரவில் நடக்கும் கதை

வெற்றி நடிப்பில் ஒரே இரவில் நடக்கும் கதை

1 mins read

வெற்றி நாய­க­னாக நடிக்­கும் புதிய படத்­துக்கு 'இரவு' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர்.

'சிகை', 'பக்­ரீத்' ஆகிய படங்­களை இயக்­கிய ஜெக­தீ­சன் சுபு இப்­ப­டத்தை இயக்­கு­கி­றார்.

அரியா செல்­வ­ராஜ் என்ற புது­மு­கம் நாய­கி­யாக அறி­மு­க­மா­கி­றார்.

பொன்­னம்­ப­லம், மன்­சூ­ர் அலி­கான், ஜார்ஜ் மரி­யான் உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

"இதற்கு முன்பு, 'சிகை' படத்­தில் திரு­நங்­கை­யின் காத­லைச் சொன்­னேன். 'பக்­ரீத்' படத்­தில் ஒட்­ட­கத்­திற்­கும் மனி­த­னுக்­கு­மான அன்­பைச் சொன்­னேன்.

"மூன்­றா­வ­தாக, உள­வி­யல், மனோ­தத்­துவ அம்­சங்­க­ளைக் கொண்ட கதைக்­க­ளத்தை உரு­வாக்கி உள்­ளேன். ஒரு வகை­யில் திகில் கதை என்­றும் கூற­லாம்.

"ஒரே நாளில் நடப்­பது போன்ற கதை­யைக் கொண்டு உரு­வா­கும் படம். தன் முன்­னால் நடப்­பது நிஜமா, கற்­ப­னையா என்று தீர்­மா­னிக்க முடி­யாத குழப்­பத்­துக்கு ஆட்­ப­டு­கி­றான் கதா­நா­ய­கன்.

"தான் எதிர்­கொள்­ளும் பிரச்­சினை மலை­போல் இருப்­ப­தாக நினைத்து தொடக்­கத்­தில் மலைத்­துப் போகி­றான். எனி­னும், பின்­னர் அதி­லி­ருந்து எப்­படி மீண்டு வரு­கி­றான் என்­ப­து­தான் கதை," என்­கி­றார் இயக்­கு­நர் ஜெக­தீ­சன்.