தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலை உலக தேவதை மறைந்து ஐந்தாண்டு நிறைவு

2 mins read
6a48f890-65f2-49fa-9ccf-143565f38503
-

தனது நீண்ட நெடிய கலை­யு­ல­கப் பய­ணத்­தில் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், இந்தி, கன்­ன­டம் ஆகிய மொழி­களில் ஏறக்­கு­றைய 275 திரைப்­ப­டங்­கள் வரை நடித்­தி­ருந்த கலை­யு­லக தேவதை ஸ்ரீதேவி மறைந்து ஐந்து ஆண்­டு­கள் நேற்­று­டன் நிறை­வ­டைந்­துள்­ளது.

வசந்­த­கால நதி­யி­னில் வலம் வந்து, செந்­தூ­ரப் பூவாய் சில்­லென்ற காற்­றில் மலர்ந்து, கண்ணே கலை­மானே என கவி பாடி, கன்னி மயி­லாய் உரு­வெ­டுத்து, காலைப் பனி­யில் ஆடும் மல­ராய் காட்சி தந்து, கவிக்­கு­யி­லாய் கானம் பாடி, காற்­றில் கீத­மாய் ஒலித்து, இளமை எனும் பூங்­காற்­றாய் பல­ரின் இத­யங்­களில் வாழ்ந்­த­வர் நடிகை ஸ்ரீதேவி.

கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் காலன் என்ற கள்­வ­னால் கள­வா­டப்­பட்டு காற்­றில் கரைந்­தார். அவ­ரின் இழப்பு ஐந்து மொழி ரசி­கர்­க­ளை­யும் கண்­ணீ­ரில் ஆழ்த்­தி­யது.

1970, 80களில் தமிழ் திரை­யு­ல­கின் தனிப் பெரும் நாய­கி­யாக திகழ்ந்­தார். அழகு, திறமை இரண்­டும் ஒருங்கே அமை­யப் பெற்ற ஆற்­றல் மிகு நடி­கை­யாக அறி­யப்­பட்­டார்.

1969ஆம் ஆண்டு வெளி­வந்த 'துணை­வன்' என்ற திரைப்­ப­டத்­தின் மூலம் குழந்தை நட்­சத்­தி­ர­மாக திரைத்­து­றை­யில் காலடி எடுத்து வைத்­தார் ஸ்ரீதேவி.

தொடர்ந்து பல படங்­களில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்­த­வர் 1976ஆம் ஆண்டு இயக்­கு­நர் கே பால­சந்­தர் இயக்­கத்­தில் வெளி­வந்த 'மூன்று முடிச்சு' திரைப்­ப­டத்­தின் மூலம் தற்­போ­தைய முன்னணி நட்­சத்­தி­ரங்­க­ளான கமல்­ஹா­சன், ரஜி­னி­காந்­து­டன் கதா­நா­ய­கி­யாக நடித்­தார்.

1970, 80களில் கமல், ஸ்ரீதேவி ஜோடி தமிழ்த் திரைப்­பட ரசி­கர்­க­ளால் வெகு­வாக ரசிக்­கப்­பட்டு ஒரு வெற்றி ஜோடி­யாக பார்க்­கப்­பட்­டது. நடி­கர் கமல்­ஹா­ச­னோடு மட்­டும் ஏறக்­கு­றைய 27 திரைப்­ப­டங்­கள் வரை இணைந்து நடித்­தி­ருக்­கின்­றார் நடிகை ஸ்ரீதேவி.

'16 வய­தி­னிலே' திரைப்­ப­டத்­தின் இந்தி மறு­ப­திப்­பான 'சோல்வா சாவன்' என்ற திரைப்­ப­டத்­தின் மூலம் 1979ஆம் ஆண்டு முதன் முத­லாக நாய­கி­யாக இந்தி திரை­யு­ல­கில் தடம் பதித்­தார்.

தொடர்ந்து பல இந்தி திரைப்­ப­டங்­களில் நடித்து பாலி­வுட்­டில் அதிக சம்­ப­ளம் பெறும் நடி­கை­க­ளின் பட்­டி­ய­லில் ஸ்ரீதேவி இடம்­பி­டித்­தார்.

இந்­திய அர­சாங்­கத்­தின் உய­ரிய விரு­தான 'பத்­ம­ஸ்ரீ விருது' உள்­பட ஏரா­ள­மான விரு­து­களைப் பெற்று தனது வாழ்­நாள் முழு­வ­தும் கலை­யு­ல­கிற்கு பெருமை தேடித்­தந்த சீர்­மிகு திரைக்­க­லை­ஞ­ரா­கவே வாழ்ந்­தி­ருந்­தார் ஸ்ரீதேவி.

இணை­யற்ற நடிப்பை தந்து, அனை­வ­ரின் மனங்­களில் நின்று, தமிழ் மண்ணை மறந்து, விண்ணை அடைந்த இந்த மண்­ணின் மக­ளான, நடிகை ஸ்ரீதே­வி­யின் நினைவு நாளான நேற்று அவ­ரின் ரசி­கர்­கள் அவ­ரைப்­பற்றி வலைத்த­ளங்­களில் தங்­க­ளின் ஆழ்ந்த வருத்­தங்­க­ளைப் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.