தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரித்திகா: இன்னும் மீண்டு வர முடியவில்லை

1 mins read
6ad4ece1-ad58-46ed-a953-da6e5a2ed18b
-

'இன் கார்' படத்­தில் நடித்து முடித்­து­விட்ட போதி­லும், அந்த கதா­பாத்­தி­ரம் ஏற்­ப­டுத்­திய பாதிப்­பில் இருந்து இன்­னும் தன்­னால் வெளி­வர முடி­ய­வில்லை என்று நடிகை ரித்­திகா சிங் தெரி­வித்­துள்­ளார்.

ஹர்ஷ்வர்­தன் இயக்­கத்­தில், அவர் நடித்­துள்ள இப்­ப­டம் நாயகியை முன்­னி­லைப்­ப­டுத்தி உரு­வாகி உள்­ளது. கொடூர மனம் கொண்ட சில­ரால் கடத்­தப்­படும் இளம்­பெண் ஒரு­வர் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­கி­றார். அந்­தப் பெண்­ணின் வலியை விவ­ரிக்­கும் படம் இது.

"நடந்­து­விட்ட கொடூரச் சம்­பவத்தை அவ­ர் தனது பார்­வை­யில் எடுத்­துச் சொல்­வ­தாக காட்சி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

"இந்தி, தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம் என ஐந்து மொழி­களில் வெளி­யி­டு­கின்­ற­னர். இப்­ப­டக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­த­னர். அப்­போது, இந்­தப் படம் தமக்­குப் பெரும் சவா­லாக இருந்­ததாக ரித்திகா குறிப்பிட்டார்.

"கடத்­தப்­படும் ஒரு பெண் எத்­தனை மனச்­சி­தை­வுக்கு உள்­ளா­கி­றாள், அவள் துன்­பத்­தின் எந்த எல்லை வரை செல்­கி­றாள் என்­பதை இப்படம் நுணுக்­க­மாகச் சொல்­லும். இதில் ஏற்­றுக்கொண்ட கதா­பாத்­தி­ரத்­தில் இருந்து என்­னால் இன்­னும் மீண்டு வர முடி­ய­வில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை இப் படம் ஏற்படுத்தி உள்ளது," என்றார் ரித்திகா.