'கோபத்தால் இழந்தேன்'

3 mins read
0e78c0d6-5d03-42e8-933c-ef9e3fa8c38e
-

கதா­நா­ய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­களில் தாம் நடிப்­ப­தற்கு இயக்­கு­நர்­கள் அளிக்­கும் ஆத­ரவே முக்­கிய கார­ணம் என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

இயக்­கு­நர்­கள்­தான் தமது பலம் என்­றும் 'சொப்­பன சுந்­தரி' படத்­தின் முன்­னோட்டக் காட்­சித்­தொ­குப்பு வெளி­யீட்டு விழா­வில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"இயக்­கு­நர் நினைத்­தால் கதா­நா­ய­கர்­கள், நாய­கி­களை திரை­யில் பார்க்­கும்­போது பிர­மிப்­பை­யும் பிரம்­மாண்­டத்­தை­யும் ஏற்­ப­டுத்த இய­லும். ஏனெ­னில் கதை­யை­யும் கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் திரை­யில் காட்­சிப்­ப­டுத்­தும் பொறுப்பு அவ­ரி­டம்­தான் உள்­ளது.

"அந்த வகை­யில் 'சொப்­பன சுந்­தரி' படத்­தின் இயக்குநர் சார்­லஸ் கச்­சி­த­மா­கச் செயல்­பட்­டுள்­ளார். எனி­னும் ஒரு கட்­டத்­தில் இந்­தப் படத்தை என்னை வைத்து இயக்­கப்போவ­தில்லை என்று அவர் கோபத்­தில் முடி­வெ­டுத்­து­விட்­டார்.

"அதை அறிந்­த­தும் நான் பதற்­றம் அடை­யா­மல் அவரைச் சந்­திக்க விரும்­பி­னேன். எனது அழைப்பை ஏற்று என்­னைச் சந்­தித்­தார். அவ­ரது கோபத்­தின் ஆயுள் அவ்வளவு­தான். கோபத்­தால் எது­வும் நிக­ழாது. அத­னால் ஏற்­படும் இழப்­பு­கள்­தான் அதி­கம்," என்­றார் ஐஸ்­வர்யா.

இவ்­வாறு அறி­வுரை கூறும் தாமும்­கூட வாழ்க்­கை­யில் பல­முறை கோபப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அத­னால் பல­வற்றை இழந்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். இனி­மே­லும் அத்­த­கைய போக்­கு­டன் செயல்­படத் தாம் விரும்­ப­வில்லை என்று ஐஸ்வர்யா கூறி­னார்.

"கதா­நா­ய­கர்­களும் நாய­கி­களும் உச்சநிலை நட்­சத்­தி­ர­மாக உரு­வெ­டுப்­ப­தற்கு இயக்­கு­நர்­கள்­தான் கைகொ­டுக்­கி­றார்கள். அவர்­க­ளுக்­கான அடித்­தளத்தை அமைத்­துக் கொடுப்­பது இயக்கு­நர்­கள்­தான்.

"ஒரு கதா­நா­ய­கியை ரசி­கர்­கள் எப்­ப­டி­யெல்­லாம் கொண்­டா­டு­வார்­கள் அல்­லது எப்­ப­டிக் கொண்­டாட வேண்­டும் என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தும் அவர்­கள்­தான். இந்த 'சொப்பன சுந்­தரி' படத்தை நான் முன்பே முழு­மை­யா­கப் பார்த்­து­விட்­டேன். நான் இது­வரை சோகம் கலந்த கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் உணர்­வு­பூர்­வ­மான கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் ஏற்று நடித்­தி­ருக்­கி­றேன். இதற்­காக ரசி­கர்­க­ளின் பாராட்டு மழை­யில் நனைந்­ததை மறக்க இயலாது.

"ஆனால் இந்­தப் புதிய படத்­தில் முற்­றி­லும் நகைச்­சு­வை­யான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருக்­கி­றேன். வாழ்க்­கை­யில் மிக­வும் கடி­ன­மான வேலை என்­ன­வென்­றால், பிற­ரைச் சிரிக்க வைப்­ப­து­தான். ஒரு­வரை கண்­ணீர் சிந்த வைப்­பது எளிது. ஆனால் சிரிக்க வைப்­பது என்­பது சாதாரண விஷ­யம் அல்ல. ரசி­கர்­களை ஒரு­வர் தனது நடிப்­பால் சிரிக்க வைத்­து­விட்­டால், அவரைவிட சிறந்த நடி­கர் வேறு யாரும் இருக்க முடி­யாது. இதை உணர்ந்து இந்­தப் படத்­தில் எனக்­கான கதா­பாத்­தி­ரத்­துக்கு உயிர்­கொடுக்க முயற்சி செய்­துள்­ளேன்," என்­றார் ஐஸ்வர்யா.

'லாக்­கப்' படத்தைத் தொடர்ந்து 'சொப்­பன சுந்­தரி' படத்தை இயக்கி உள்­ளார் சார்­லஸ். லட்­சுமி பிரியா, சந்­தி­ர­மௌலி, தீபா சங்­கர், கரு­ணா­க­ரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்­ளிட்ட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர். இப்­ப­டத்­தின் முன்­னோட்ட காட்­சித் தொகுப்பை இயக்­கு­நர் மோகன் ராஜா வெளி­யிட்­டார்.

'சொப்­பன சுந்­தரி' படத்தை வெறும் நகைச்­சுவை விருந்­த­ளிக்­கும் படைப்­பாக மட்­டும் பார்க்க வேண்­டாம் என்­றும் நல்­ல­தொரு குடும்­பப் பட­மா­க­வும் இது உரு­வாகி உள்­ளது என்­றும் ஐஸ்­வர்யா குறிப்­பிட்­டார்.

"இத்­த­கைய தர­மான படைப்­பைத் தரக்­கூ­டிய திற­மை­யுள்ள சார்­லஸ் அடுத்து உச்ச நட்­சத்­தி­ர­மான ரஜி­னி­காந்தை வைத்­தும் படம் இயக்­கும் அள­வுக்கு உயர வேண்­டும். எனக்கு ரஜினி சாரை மிகவும் பிடிக்­கும். அவ­ரு­டைய ஸ்டை­லான, அழ­கான உடல்­மொ­ழி­கள் இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்­ளன. அந்­தக் காட்­சி­களை ரசி­கர்­கள் மிக­வும் ரசிப்­பர் என எதிர்­பார்க்­கி­றேன்.

"நான் கதை­யின் நாய­கி­யாக நடிக்­கும் ஒவ்­வொரு படத்­தி­லும் இயக்­கு­நர்­கள்­தான் எனது பலம் என்­பேன். 'கனா' படத்தை எனக்கு வழங்­கிய இயக்­கு­நர் அருண் ராஜா, 'க/பெ ரண­சிங்­கம்' படத்தை வழங்­கிய இயக்­கு­நர் விரு­மாண்டி, இப்­போது 'சொப்­பன சுந்­தரி' படத்­தில் நடிக்க வைத்­துள்ள சார்­லஸ் ஆகிய மூவ­ரும் எனது திரைப்பய­ணத்­தில் மிக முக்­கி­ய­மா­ன­வர்­கள். என் திற­மையை நம்பி வாய்ப்பு அளித்­த­வர்­கள்," என்று ஐஸ்­வர்யா ராஜேஷ் மேலும் தெரி­வித்­தார்.