'சினிமா சிலரை தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறது'

2 mins read
f1e2e3d6-e8f0-41c5-be8d-b7bca961707a
-

சினிமா என்­பது ஒரு சூதாட்­டம் என்று சொல்பவர்­கள் உண்டு. ஒரு முறை அதற்குள் நுழைந்தவர்கள் மீண்­டும் வெளி­யில் போவது அவ்­வ­ளவு சாதா­ரண விஷ­ய­மல்ல. தொடர்ந்து வெற்­றி­க­ளைக் குவித்த ஏவிஎம் நிறு­வ­னம், சில தயா­ரிப்­பா­ளர்­கள் ஒரு சில தோல்­வி­க­ளால் சினி­மாவே வேண்­டா­மென ஒதுங்­கிய வர­லா­றும் உண்டு.

நேற்று முன்­தி­னம் வெளி­யான தயா­ரிப்­பா­ளர் விஏ துரை­யின் காணொளி திரை­யு­ல­கத்­தில் மட்­டு­மல்ல சினிமா ரசி­கர்

­க­ளி­ட­மும் ஒரு பரி­தா­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தயா­ரிப்­பா­ளர் விஏ துரை தயா­ரித்த 'பிதா­ம­கன்' படம் பெரும் நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அதற்­காக அவர் பல பஞ்­சா­யத்­து­க­ளைச் சந்­திக்க நேர்ந்­தது.

அப்­படி ஒரு முறை பஞ்­சா­யத்­திற்­காக அப்­போ­தைய நடி­கர் சங்­கத் தலை­வர் விஜ­ய­காந்தை சந்­தித்­த­போது அவர் சொல்லி, துரை தயா­ரித்த படம்­தான் 'கஜேந்­திரா'. அந்­தப் பட­மும் பெரும் தோல்­வி­யைத் தழு­வி­யது.

அந்த இரண்டு படங்­க­ளின் நஷ்­டங்­க­ளி­லி­ருந்து துரையால் மீள முடி­ய­வில்­லை­யாம். 'பிதா­ம­கன்' படத்­தின் போதே இயக்­கு­நர் பாலா­வி­டம் அடுத்து ஒரு படத்­தைத் தயா­ரிக்க முன்­ப­ணம் கொடுத்­தி­ருந்­தா­ராம்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு அந்த முன்­ப­ணத்­தைக் கேட்டு பாலா வீட்­டிற்­குச் சென்­ற­போது அவ­ருக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது. சினி­மா­வில் வாங்­கிய முன்­ப­ணங்­க­ளைத் திருப்­பித் தரும் பழக்­க­மெல்­லாம் பல­ருக்­கும் இல்லை என்­கி­றார்­கள்.

இந்நிலையில் தனது குடும்­பத்­தி­ன­ரா­லும் ஒதுக்­கப்­பட்ட விஏ துரை உடல்­

ந­லம் பாதிக்­கப்­பட்டு, சர்க்­கரை நோயால் மிக­வும் அவ­திப்­பட்டு வரு­கி­றார்.

மருத்­துவ செல­வு­க­ளுக்­குக்­கூ­டப் பணம் இல்­லா­த­தால்­தான் அவர் பேசிய காணொ­ளியை அவ­ரது நண்­பர்­கள் வலைத்­த­ளத்­தில் பகிர்ந்­துள்ளனர்.

அதைப் பார்த்த 'பிதா­ம­கன்' படத்­தில் நடித்த சூர்யா, துரை­யின் மருத்­து­வ­மனை செல­வுக்­கான தொகையை ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் சில தயா­ரிப்­பா­ளர்­கள், நடி­கர் கரு­ணாஸ் உள்­ளிட்ட சில­ரும் உதவி செய்ய முன் வந்­துள்­ளார்­கள். திரை­யு­ல­கத்­தி­லி­ருந்து இன்­னும் பல­ரும் உதவி செய்­யத் தயா­ராக உள்­ளார்­க­ளாம்.

தங்­க­ளது எதிர்­கா­லத்­திற்­காக ஒரு சிறு தொகை­யைக்­கூட சேர்த்து வைக்­காத நிலை­யில் சில தயா­ரிப்­பா­ளர்­கள் இருப்­பது குறித்து தமிழ்த் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர் சங்­கம் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டும் என்று கோரிக்கை எழுந்­துள்­ளது.

சினிமா நடி­கர்­கள் பலரை பணக்­கா­ரர்­களை உரு­வாக்­கு­கிறது. அதே சம­யம் பணக்­கா­ரர்­க­ளாக இருந்த தயா­ரிப்­பா­ளர்­களை ஏழை­க­ளா­க­வும் ஆக்­கி­வி­டு­கிறது.

தயாரிப்பாளர் வி.துரை தயாரித்த 'பிதாமகன்' படத்தில் சூர்யா, விக்ரம், சங்கீதா.