பனை மரங்களையும் அவற்றைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது 'நெடுமி' திரைப்படம்.
இதில் நாயகனாக பிரதீப் செல்வராஜ், நாயகியாக அபிநயா நடித்துள்ளனர். ஏ.ஆர்.ராஜேஷ், பிரீத்தி ரமேஷ், வாசு, கிசோர் மணி, குழந்தை நட்சத்திரங்கள் சரத்ராஜ், ராம்கி, முரளிதரன், வெங்கடேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நந்தா லட்சுமன் இயக்கி உள்ளார்.
"நான் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கி உள்ளேன். சுனாமி, புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.
"மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளிக் கொடுப்பவை பனை மரங்கள்தான். அவற்றைச் சார்ந்து வாழும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக நெடுமி உருவாகிறது," என்கிறார் நந்தா.

