திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என்று விதிமுறை ஏதும் இல்லை என்கிறார் காஜல் அகர்வால்.
தற்போது 'இந்தியன் 2' உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்து வரும் அவர் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, கவர்ச்சியாக நடிப்பது குறித்து ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.
"அதற்குப் பதிலளித்த காஜல், கவர்ச்சியாக நடிக்கும் விஷயத்தில் தானும் தனது கணவரும் வெளிப்படையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"காதல் காட்சிகள் என்றால் சக நடிகருடன் நான் நெருக்கமாக நடிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.
"திருமண வாழ்க்கையும் செய்யும் தொழிலும் வெவ்வேறானவை. கதைக்கேற்ப கவர்ச்சி காட்ட வேண்டியிருந்தால் அதற்கு உடன்பட வேண்டியிருக்கும். திருமணத்துக்குப் பிறகு நான் நடிக்க மாட்டேன் என்று வதந்தி பரவியது. அதற்கு எனது செயல்கள் மூலம் பதில் அளித்து இருக்கிறேன்," என்றார் காஜல் அகர்வால்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

