இந்திப் பட வாய்ப்புகள்: அனுஷ்கா திடீர் விளக்கம்

இந்திப் பட வாய்ப்புகள்: அனுஷ்கா திடீர் விளக்கம்

1 mins read
69110838-85d1-4b99-a5cb-44e056d9326f
-

தென்­னிந்­திய மொழி­களில் பல வெற்­றிப் படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும், அனுஷ்கா இந்­தி­யில் நடிக்­க­வில்லை என்­ப­தில் அவரது ரசி­கர்­க­ளுக்கு இன்­ற­ளவும் வருத்­தம் உள்­ளது.

இந்­நி­லை­யில், சம்­பளப் பிரச்­சினை கார­ண­மா­கவே 'சிங்­கம்' படத்­தின் இந்தி மறு­ப­திப்­பில் நடிக்க முடி­யா­மல் போன­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார். மேலும், இந்­தி­யில் நடிப்­ப­தற்­கான புது வாய்ப்­பு­கள் தேடி வரும் என்று இப்­போ­தும் நம்­பிக்­கை­யோடு காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்­னணி நடி­கை­யாக வலம் வந்த அனுஷ்கா பாகு­பலி மூலம் இந்­திய அள­வில் பிர­ப­ல­மா­னார். அடுத்து அவர் இந்­தி­யில் நடிப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் தேடி­வந்த வாய்ப்­பு­களை அவர் நிரா­க­ரித்­த­தாக வெளி­யான தக­வல் ரசி­கர்­களுக்கு அதிர்ச்சி அளித்­தது. இந்­நி­லை­யில், அப்­போது என்ன நடந்­தது என்­பது குறித்து இப்­போது விளக்­கமளித்துள்ளார்.

"சூர்­யா­வும் நானும் தமி­ழில் நடித்த 'சிங்­கம்' படத்தை அதே பெய­ரில் இந்­தி­யில் மறு­ப­திப்பு செய்­த­னர். அஜய்­தேவ்­கன்­ நா­ய­க­னாக நடித்­தார். அ­தில் நடிக்க காஜல் அகர்­வா­லுக்கு முன்பு என்­னைத்­தான் அணு­கினர். எனி­னும் சம்­பள விஷயத்­தில் ஏற்­பட்ட சிறிய பிரச்­சினை கார­ண­மாக அந்­தப் படத்­தில் நான் நடிக்க முடி­யா­மல் போனது. அதன்­பி­றகு இந்தியில் நல்ல வாய்ப்­பு­கள் அமையவில்லை," என்று அனுஷ்கா கூறியுள்ளார்.