'கடும் வெயிலில் வாடினேன்'

'கடும் வெயிலில் வாடினேன்'

3 mins read

தனது திரைப்பய­ணத்­தின் முக்­கி­ய­மான, சுவா­ர­சி­ய­மான கால­கட்­டத்­தில் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஜெயம் ரவி.

தாம் நடிக்­கும் அனைத்­துப் படங்­க­ளுக்­கும் ஒரே மாதிரி­யான முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு வெளி­யான 'ஜெயம்' படத்­தின் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான ரவி பல வெற்­றிப் படங்­களில் நடித்த அனு­ப­வம் உள்­ள­வர். 'பொன்­னி­யின் செல்­வன்' படம் அந்­தப் பட்­டி­ய­லில் முத­லி­டம் பிடித்­துள்­ளது.

கௌரவ வேடத்­தில் நடித்­தா­லும் பெரும் பொருள்­செ­ல­வில் உரு­வா­கும் படம் என்­றா­லும், ஒரே மாதி­ரி­யான முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­து­தான் தனது வழக்­கம் என்­கிறார் ஜெயம் ரவி.

"இயக்­கு­நர் மணி­ரத்­னம் என்­னைத் தேர்வு செய்­த­போது, சில தரப்­பி­னர் விமர்­சித்­த­னர். ஆனால் படம் வெளி­யான பிறகு கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ற தேர்வு என்று பாராட்­டு­கள் குவிந்­தன.

"எப்­போ­துமே நான் ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­துக்­காக உண்­மை­யாக உழைப்­பேன். அண்­மை­யில் வெளியான 'அகி­லன்' படம் வரை இது­தான் எனது அணு­கு­முறை. எனது உழைப்­பை­யும் அர்ப்­ப­ணிப்­பை­யும் யாரா­லும் குறைகூற முடி­யாது," என்று சொல்­லும் ஜெயம் ரவி, ஒரு கதா­பாத்­தி­ரத்­தின் வெற்­றிக்கு அதன் தோற்­றம் பெரும் பங்­க­ளிப்­பதாகக் குறிப்­பி­டு­கி­றார்.

'அகி­லன்' படத்­துக்­காக பல மணி­நேரம் கடும் வெயில், உப்பு நீரில் நிற்க வேண்­டி­யி­ருந்­த­தாம். துறை­மு­கப் பணி­யா­ள­ராக நடிக்­கும்­போது, ரசி­கர்­கள் அதை ஏற்­கும் வகை­யில் தனது தோற்றம் இருக்க வேண்­டும் என்­ப­தில் கவ­ன­மாக இருந்­­தா­ராம்.

"கதா­பாத்­தி­ரத்­தின் வெற்­றிக்கு அதன் தோற்­றம்­தான் ஐம்­பது விழுக்­காடு பங்­க­ளிப்­ப­தாக நம்­பு­கி­றேன். அகி­லன் கதா­பாத்­தி­ரத்­துக்­காக எனது தோற்­றத்தை மாற்ற வேண்­டி­யி­ருந்­தது. இயக்­கு­ந­ரின் விருப்­பத்தை அறிந்து அதற்­கேற்ப செயல்­ப­டு­வது முக்­கி­யம்.

"படங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் எனது அனு­ப­வம் முக்­கியப் பங்கு வகிக்­கிறது. மேலும் திரைத்­துறை சார்ந்து நான் படித்த படிப்­பும் கைகொ­டுக்­கிறது. மேலும், என்­னு­டன் பணி­யாற்­றும் கலை­ஞர்­கள், ரசி­கர்­க­ளி­டம் இருந்­தும்­கூட பல­வற்­றைக் கற்­றுக்­கொள்­கி­றேன்.

"ஒரு படத்­தின் வெற்­றிக்கு மேலும் பல அம்­சங்­கள் துணை­நிற்­கின்­றன. அந்­தப் படம் எந்த சம­யத்­தில் வெளி­யா­கிறது, அச்­ச­ம­யம் ரசி­கர்­க­ளின் மனப்­போக்கு எப்­படி உள்­ளது என்­ப­தைக் கவ­னிக்க வேண்­டும். உதா­ரண­மாக 'கோமாளி' படம் வெளி­யா­ன­போது 1990களில் நிக­ழும் கதை என்­பதை மன­திற்­கொண்டு அதற்­கேற்ப காட்­சி­களை அமைத்­தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்­தது.

"ஒரு படத்­தில் நாய­கன், கௌரவ வேடம் என்­றெல்­லாம் நான் பிரித்­துப் பார்ப்­ப­தில்லை. இரண்­டுக்­கும் ஒரே மாதிரி­யான முக்­கி­யத்­து­வம் அளிக்­கி­றேன்," என்­கி­றார் ஜெயம் ரவி.

'அகி­லன்' படத்­தின் படப்­பி­டிப்பு சென்னை துறை­மு­கத்­தில் நடந்­த­போது, தின­மும் மூன்று மணிக்­கெல்­லாம் கண்­வி­ழித்­து­வி­டு­வா­ராம். மூன்­றரை மணிக்கு படப்­பி­டிப்பு தொடங்­கு­மாம்.

"கடும் வெயில் நேரத்­தில் துறை­முகத்­தில் நிற்­பது எவ்­வ­ளவு கடி­ன­மானது என்­பது எல்­லா­ருக்­கும் தெரியும். படக்­கு­ழு­வைச் சேர்ந்த பலர் இடுப்­ப­ளவு உப்பு நீரில் பல மணி நேரம் நிற்க வேண்­டி­யி­ருந்­தது.

"இப்­படி மூன்று நாள்­கள் இடை­வி­டா­மல் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம். இந்­தப் படத்­துக்­காக கிரேன் வாக­னத்தை இயக்க கற்­றுக்­கொண்­டேன். கடும் வெயிலை எப்­ப­டிச் சமா­ளிக்க முடிந்­தது என என் நண்­பர்­கள் கேட்­ட­னர். நான் சென்னை பையன். அத­னால் எத்­த கைய சூழ­லை­யும் சமா­ளிக்க முடி­யும் என் ­றேன்," என்று கூறி சிரிக்­கி­றார் ஜெயம் ரவி.

, :

தமிழகத்  

ஜெயம் ரவி