34 ஆண்டுகளாகத் தாங்கள் வாழ்ந்த 'குல்மொகர்' வீட்டை விற்றுவிட்டு அடுக்குமாடியில் வாழும் வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது பத்ரா குடும்பம்.
குடும்பத் தலைவி ஷர்மிளா தாகூர், தான் இனி கூட்டுக் குடும்பத்துடன் வாழப்போவதில்லை என்றும் பாண்டிச்சேரியில் தனி வீட்டில் வசிக்கப்போவதாகவும் அறிவிக்கிறார்.
இதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் பெரிய குடும்பம் புதைத்து வைத்திருக்கும் ரகசியங்களும்தான் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் கதை.
12 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றும் ஷர்மிளா தாகூர் தன் அட்டகாச நடிப்பால் நிறைவு தருகிறார்.
மனோஜ் பாஜ்பாய் - சிம்ரன் ஜோடி உணர்வுபூர்வமான நடிப்பால் நெகிழச் செய்கின்றனர். மகனாக சுரஜ் சர்மா, கௌரவ வேடத்தில் அமோல் பாலேகர் நன்றாக நடித்து இருக்கின்றனர்.
மேற்கத்திய பாதிப்பில் சிக்கித் தவிக்கும் பாலிவுட்டிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான இந்தியக் கதை என்ற வகையில் இது 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!' என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள்.

