'என்னை ஒதுக்குகிறார்கள்'

'என்னை ஒதுக்குகிறார்கள்'

3 mins read
1bf69e0c-977e-444f-92a8-cd376076249d
-

தமிழ்த் திரை­யு­ல­கில் தாம் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக நடிகை வர­லட்­சுமி கூறி­யி­ருப்­பது சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

எதற்­காக தம்மை ஒதுக்­கு­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வில்லை என்­றும் இது­கு­றித்து யோசிப்­பதை தாம் கைவிட்டு­விட்­ட­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"'சர்­கார்' படத்­தில் விஜய்­யு­டன் இணைந்து நடித்­தி­ருந்­தேன். அதன் பிறகு எனக்கு நிறைய வாய்ப்­பு­கள் தேடி வரும் என்று பல­ரும் கூறி­னர். ஆனால், அப்­படி எது­வும் நடக்­க­வில்லை.

"தமிழ்த் திரை­யு­ல­கி­னர் என்­னைக் கண்டு பயப்­ப­டு­கி­றார்­களா என்று தெரி­ய­வில்லை. இயக்­கு­நர்­கள் அல்­லது கதா­நா­ய­கர்­க­ளுக்கு நான் நடிப்­ப­தால் என்ன சிக்­கல் ஏற்­பட்­டு­வி­டும் என்­ப­தும் புரி­ய­வில்லை.

"எங்­கேயோ எதுவோ இடிக்­கிறது. ஆனால், உடன் நடிக்­கும் நடி­கர்­களை வர­லட்­சுமி தன் நடிப்­பால் தூக்­கிச் சாப்­பிட்­டு­வி­டு­வார் என்று பலர் பேசிக் கொள்­வ­தா­கக் கேள்­விப்­பட்­டேன். ஒரு­வேளை அது உண்­மை­யாக இருக்­கக்­கூ­டும்.

"என்­னைப் பொறுத்­த­வரை, எனக்கு எங்கு சோறு கிடைக்­கி­றதோ அங்கு போகி­றேன். அது மட்­டுமே கார­ணம். மற்­ற­படி, நான் அர­சி­யல் பேச­வில்லை.

"தெலுங்­கில் எனக்கு நல்ல மரி­யாதை கிடைக்­கிறது. தேவை­யற்ற விஷ­யங்­கள் குறித்து அங்கு பேரம் பேசு­வ­தில்லை. கலை­ஞர்­க­ளின் மதிப்பை உணர்ந்து செயல்­ப­டு­கி­றார்­கள்.

"உங்­க­ளுக்கு வாய்ப்பு தரு­கி­றோம். ஆனால், ஊதி­யத்­தைக் குறைத்­துக்­கொள்­ளுங்­கள் என்று தெலுங்­கில் யாருமே நிபந்­த­னை­கள் விதித்­த­தில்லை. உண்­மை­யில், தங்­க­ளு­டைய படங்­களில் நானும் இணை­வதை பெரு­மை­யா­கக் கரு­து­கி­றார்­கள்," என்­கி­றார் வர­லட்­சுமி.

இவ­ரது நடிப்­பில் அடுத்து வெளி­யா­கும் தெலுங்கு படம் 'அனு­மன்'. இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு அண்­மை­யில் வெளி­யா­னது.

வர­லட்­சு­மி­யின் நடிப்பு மிரட்­ட­லாக இருப்­ப­தா­க­வும் அதன் கார­ண­மாக படத்­தின் வியா­பா­ரம் அசத்­த­லாக இருக்­கும் என்­றும் தெலுங்கு ஊட­கங்­கள் கூறி­யுள்­ள­ன­வாம்.

"வர­லட்­சுமி நடிக்­கும் படங்­கள் நிச்­ச­யம் வசூல் ரீதி­யில் வெற்­றி­பெ­றும் என்­கி­றார்­கள். தெலுங்­கில் அந்த அள­வுக்கு நல்ல பெயர் எடுத்­தி­ருக்­கி­றேன்.

"எனக்­கென தனி ரசி­கர் கூட்­டத்தை உரு­வாக்கி வரு­கி­றேன். உண்­மை­யில், தமி­ழில் அந்த அள­வுக்கு நான் வள­ர­வில்லை. அண்­மை­யில் நான் நடித்த 'கொன்­றால் பாவம்', 'அரசி' உள்­ளிட்ட தமிழ்ப் படங்­கள் எனக்கு தமி­ழில் புதிய பாதையை வகுத்துக் கொடுக்­கும் என எதிர்­பார்க்­கி­றேன்.

"எந்த மொழி­யில் வாய்ப்பு வந்­தா­லும் நடிக்­கத் தயார். ஆனால், தமிழ் சினிமா பல நல்ல கலை­ஞர்­களை இழந்து வரு­கிறது. யாருக்­கும் உரிய மரி­யாதை கிடைப்­ப­தில்லை. இதன் கார­ண­மா­கவே என்­னைப் போல் மேலும் பலர் தெலுங்கு பக்­கம் போகி­றோம்," என்று சொல்­லும் வர­லட்­சுமி, தனது ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் வகை­யில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் கவ­னம் செலுத்தி வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

மேலும், தமது நடிப்பு ஒரே மாதி­ரி­யாக இருந்­து­வி­டக் கூடாது என்­ப­தி­லும் கவ­ன­மாக உள்­ளா­ராம்.

"'சண்ட கோழி-2', 'சர்­கார்' ஆகிய இரு படங்­க­ளி­லும் வில்­லி­யாக நடித்­துள்­ளேன்.

எனி­னும் இரு கதா பாத்­தி­ரங்­க­ளுக்­கும் இடையே எவ்­வ­ளவு வித்­தி­யா­சம் காண்­பிக்க முடி­யும் என்­ப­தைக் கணக்­கிட்டு அதை சாதிக்கு முயற்சி செய்­தேன்.

"என்­னு­டைய இந்த மெனக்­கெ­ட­லும் உழைப்­பும்­தான் இன்று வரை திரை­யு­ல­கில் நீடிக்க கைகொ­டுக்­கிறது. தெலுங்கு ஊட­கங்­கள் இதைப் புரிந்து­கொண்டு என்­னைப் பாராட்­டு­கின்­றன.

"மிக விரை­வில் தமிழ் ஊட­கங்­களும் என்­னைப் பாராட்­டும் என நம்புகிறேன். அந்த நாள் தொலைவில் இல்லை என்றும் நம்புகிறேன். நல்ல வாய்ப்பு களுக்காக அவசரப் படாமல் காத்திருப்பேன்," என்று நம்பிக்கை யுடன் பேசுகிறார் வர­லட்­சுமி.

, :

தமி­ழ­கத்  