அசத்தும் கதாநாயகிகள்

அசத்தும் கதாநாயகிகள்

3 mins read
5eaf919e-dcf8-4bbb-94bf-cfd2cef06be6
-

தென்­னிந்­திய நடி­கை­கள் இந்­திப்­பட வாய்ப்­பு­க­ளுக்­காக ஏக்­கத்­து­டன் காத்­துக்­கி­டந்த காலம் மலை­யே­றி­விட்­டது. இப்­போது, இந்­தித் தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் தென்­னிந்­திய நடி­கை­க­ளின் கால்­ஷீட்­டுக்­காக காத்­துக்­கி­டக்­கி­றார்­கள்.

அவர்­களில் சில­ரைப் பற்றி பார்ப்­போம்.

ஒரு காலத்­தில் இந்­திப் படங்­களில் நடிக்­கும் தென்னிந்­திய நடி­கை­க­ளுக்கு பெரும் ரசி­கர் ­கூட்­டம் இருந்­தது. அவர்களும் இந்­தி­யில் நடிப்­பதை பெருமைக்­கு­ரிய விஷயமாகக் கரு­தி­னர்.

அதன் பின்­னர் கால ஓட்­டத்­தில் பல மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. இந்­தி­யில் முன்­னணி நடி­கை­க­ளாக இருந்த பல­ரும் தமிழ்ப் படங்­களில் நடிப்­ப­தைப் பெரு­மை­யா­கக் கரு­தி­னர்.

இப்­போது தென்­னிந்­திய நடி­கை­க­ளுக்கு இந்­தித் திரை­உலகத்­தைப் போன்று அதிக சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கிறது. தென்­னிந்திய மொழிப் படங்­க­ளுக்­கும் வட­இந்­தி­யா­வில் பெரும் வர­வேற்பு கிடைத்து வரு­கிறது.

"இதன் கார­ண­மாக இந்­திப் பட உலகை தென்­னிந்­திய நடி­கை­கள் ஆளும் நிலைமை உரு­வாகி இருக்­கிறது. தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­னர் வடஇந்­தி­யா­வில் இருந்து நாய­கி­களை இறக்­கு­மதி செய்த நிலை மாறி, இப்­போது நயன்­தாரா, ஷ்ருதிஹாசன், ராஷ்­மிகா, சமந்தா, அம­லா­பால் உள்­ளிட்ட தென்­னிந்­திய நடி­கை­கள் இந்திப் பட உலகை கலக்கு­கி­றார்­கள்.

"குறிப்­பாக 'பாகு­பலி', 'ஆர்ஆர்ஆர்', 'காந்­தாரா', 'பொன்­னி­யின் செல்­வன்', 'புஷ்பா', 'கேஜிஎஃப்' உள்­ளிட்ட தென்­னிந்தியப் படங்­கள் நாடு முழு­வ­தும் பெரும் வசூ­லைப் பெற்­றுள்­ளன. அத­னால் அப்­ப­டங்­களில் நடித்த நாயகி­களுக்கு நாடு தழு­விய அள­வில் பெரும் வர­வேற்பு கிடைத்­துள்­ளது," என்­கின்­ற­னர் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

நயன்­தாரா அண்­மைக்­கா­ல­மாக தன் ரசி­கர்­க­ளுக்கு வசூல் ரீதி­யில் வெற்­றிப் படங்­க­ளைக் கொடுக்­க­வில்லை. எனினும் அவ­ரது சந்தை மதிப்பு குறைய­வில்லை. விஜ­ய­சாந்­திக்­குப் பிறகு 'பெண் சூப்பர் ஸ்டார்' என்ற பட்­டத்தை தன் வசம் கொண்­டுள்­ளார் நயன்­தாரா.

இப்­போது தென்­னிந்­தி­யா­வில் அவர்­தான் முதல் நிலை நடிகை என்­கி­றார்­கள். அட்லீ இயக்­கத்­தில் ஷாரூக்­கான் நடிக்­கும் 'ஜவான்' என்ற இந்­திப் படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றார் நயன்­தாரா. இப்­ப­டம் வெளி­யான பிறகு அவ­ரது மதிப்பு இந்­தித் திரை­யு­ல­கி­லும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வட இந்­திய ஊட­கங்­கள் நயன்­தா­ரா­வைப் பற்­றிய ஏதா­வது ஒரு செய்­தியை தினந்­தோ­றும் வெளி­யிட்டு வரு­கின்­ற­ன­வாம்.

இரண்டு கன்­னடப் படங்­களில் நடித்த பிறகு தெலுங்­கில் அறி­மு­க­மா­ன­வர் ராஷ்­மிகா. இப்­போது தெலுங்கு தேசத்­தில் சக்­கைப்­போடு போட்டு வரு­ப­வர், தமி­ழி­லும் அசத்தி வரு­கி­றார். இந்­நிலை­யில், 'புஷ்பா' படத்­தின் மூலம் வட­இந்­திய ரசி­கர்­களும் ராஷ்­மி­காவை கவனிக்கத் தொடங்கி உள்­ள­னர். தற்­போது இரண்டு இந்­திப் படங்­களில் ஒரு­சேர நடித்­துக்கொண்­டி­ருப்­ப­வர், மும்­பை­யில் நடை­பெ­றும் பல்­வேறு நிகழ்ச்­சி­களில் தொடர்ந்து பங்­கேற்று வரு­கி­றார்.

'தி ஃபேமிலி மேன்' இந்தி இணை­யத்­தொ­டர் சமந்­தா­வின் திரை வாழ்க்­கை­யில் முக்­கிய திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தி­யது என­லாம். அத்­தொ­ட­ருக்­குக் கிடைத்த நல்ல விமர்­ச­னங்­க­ளால் இந்­தி­யில் தனக்­கென ஓரிடத்தை சமந்தா பிடித்­து­விட்­ட­தாக பல­ரும் கூறு­கின்­ற­னர்.

உடல்­நலப் பாதிப்­பால் சற்றே முடங்கி உள்ள போதி­லும், நல்ல வாய்ப்­பு­கள் பல அவ­ரைத் தேடி வரு­கின்­ற­ன­வாம். இந்தி மட்­டு­மல்­லா­மல் பிற மொழி­க­ளி­லும் அவ­ருக்கு வாய்ப்­பு­கள் கிடைத்து வரு­கின்­றன.

தமிழ், தெலுங்­கில் தொடர்ந்து நடித்து வரும் அமலா பால், 'போலா' படம் மூலம் இந்தி ரசி­கர்­க­ளைக் கவர உள்­ளார். "சம்­ப­ளம் குறை­வாக இருந்­தா­லும் கவ­லை­இல்லை. நல்ல கதைக்­க­ளம் இருந்­தால் போதும்," என்­பது­தான் இந்­தி­யில் நடிக்க அமலா விதிக்­கும் முக்­கிய நிபந்­த­னை­யாம். இத­னால் கவ­ரப்­பட்ட இளம் இயக்­கு­நர் ஒரு­வர் அவரை அணுகிச் சொன்ன வித்தி­யா­ச­மான கதை பிடித்­துப் போகவே, அவர் கேட்­ட­தை­விட அதிக நாள்­கள் கால்­ஷீட் ஒதுக்­கி­யுள்­ளா­ராம் அமலா.

மும்­பை­யில் இருந்து வந்து தமி­ழில் முன்­னணி கதா­நா­ய­கி­யாக உயர்ந்து தமிழ்­நாட்­டின் மருமகளாகிப் போன ஜோதி­கா­வும் இப்­போது இந்­தி­யில் நடிக்­கத் தொடங்கி உள்­ளார்.

ஷ்ரு­தி­ஹா­சன் உள்­ளிட்ட மேலும் சில இளம் நாய­கி­க­ளை­யும் இந்தி திரை­யு­ல­கத்­தி­னர் ஒப்­பந்­தம் செய்து வரு­கின்­ற­னர்.

"அனைவருக்குமே எதிர்பார்த்ததைவிட அதிக தொகை ஊதியமாகக் கிடைக்கிறது. எனினும் முன்புபோல் ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என இந்தித் தயாரிப்பாளர்கள் நிபந்தனை விதிப்பதில்லை என்பது நல்ல முன்னேற்றம்.

"இந்தி நாயகிகள் நிறைய செலவுகளை ஏற்படுத்துவார்கள் எனில் தென்னிந்திய நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. இதுவும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க முக்கியக் காரணம்," என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

, :

தமிழகத்  