இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்றபோது தாம் மிகுந்த கேலி, கிண்டல்களுக்கு ஆளானதாக நடிகை டாப்சி கூறியுள்ளார்.
அழகிப் போட்டி தொடர்பாக நிகழ்ந்த அரசியலைக் கண்டு தமக்கு அருவருப்பு ஏற்பட்டதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஆரம்ப காலத்தில் இந்திய அழகிப் போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது நிகழ்ந்த சில சம்பவங்களால் மிகவும் வேதனை அடைந்தேன்.
“போட்டி சமயத்தில் எனது சுருட்டை தலைமுடியைப் பார்த்து அங்குள்ள பலர் ஏளனம் செய்தார்கள். இப்படிப்பட்ட சுருட்டை முடியோடு இந்திய அழகிப் போட்டியில் வெற்றிபெற முடியாது என்றும் கேலி செய்தனர்.
“இன்னும் கொடுமை என்னவென்றால் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து ஒருவேளை இந்திய அழகி போட்டியில் வெற்றிபெற்றால் எங்கள் நிறுவனங்களின் சார்பில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
“எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 விழுக்காட்டை அவர்களுக்குக் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் பயமுறுத்தினர்.
“அந்த நாள்கள் அனைத்துமே என்னைப் பொறுத்தவரை கெட்ட கனவைப் போன்றவை. அவற்றை மறக்க விரும்புகிறேன்,” என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் டாப்சி.