ஜெயம் ரவி நடிக்கும் புதுப் படத்துக்கு சைரன் எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில் அவர் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அந்தோணி பாக்யராஜ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் என இரு நாயகிகள் உள்ளனர்.
குற்றச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இளையர்களைக் கவரும் பாடல்கள் உள்ளனவாம். படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.