'யானை முகத்தான்': ஒரு சாமானியனின் வாழ்க்கையில் வரும் கடவுள்

'யானை முகத்தான்': ஒரு சாமானியனின் வாழ்க்கையில் வரும் கடவுள்

2 mins read
56aeb06d-8e74-4481-8b13-4f18b9b2c642
-

மலை­யாள முன்­னணி இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான ரெஜிஷா மிதிலா இயக்­கும் தமிழ்ப் படம் 'யானை ­மு­கத்­தான்'. இதில் யோகி பாபு நாய­க­னாக நடித்­துள்­ளார். மலை­யா­ளத்­தில் முன்­னணி நடி­கர்­களை வைத்து சில படங்­களை இயக்­கித் தயா­ரித்­துள்ள அனு­ப­வம் கொண்­ட­வர் ரெஜிஷா.

இப்­ப­டத்­தின் குறு முன்­னோட்­டக் காட்சி அண்­மை­யில் வெளி­யாகி ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­தது. இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த ரெஜிஷா, தமது படத்­தின் கதை நாய­க­னாக யோகி பாபுவை தேர்ந்­தெ­டுத்­தது ஏன் என்­ப­தற்­கான விளக்­கத்தை அளித்­தார்.

"கொரோனா பொது முடக்­கத்­தின்­போது வீட்­டில் சும்மா இருக்க மு­டி­யா­மல் ஏரா­ள­மான படங்­களைப் பார்த்­தேன். அவற்­றுள் யோகி பாபு நடித்­துள்ள 'மண்டேலா' பட­மும் ஒன்று. "அண்­மைக்­கா­லத்­தில் என்னை அதி­கம் கவர்ந்த படங்­களில் இதுவும் ஒன்று.

"உடனே யோகி பாபுவை தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு அந்­தப் பட­மும் அவ­ரது நடிப்­பும் மிக­வும் பிடித்­தி­ருந்­தது என்று பாராட்­டி­னேன். பிறகு நான் உருவாக்கி வைத்திருந்த ஒரு கதைக்கருவை மட்டும் அவருடன் பகிர்ந்­து­கொண்டேன். அதைக் கேட்­ட­தும் அவ­ருக்கு மிக­வும் பிடித்­துப்போனது.

"தாமே அந்­தப் படத்­தில் நடிக்க விரும்­பு­வ­தா­கக் கூறி­னார். அதைக் கேட்­ட­தும் கட­வுளே நேரில் வந்து வரம் தந்­த­து­போன்று இருந்­தது. கார­ணம், தமி­ழில் நல்ல படத்­தின் மூலம் அறி­மு­க­மாக வேண்­டும் என்­ப­தில் தீவி­ர­மாக இருந்­தேன்.

"யோகி­யைப் போன்ற முன்னணி நடி­கர் நான் கேட்­கா­ம­லேயே கால்­ஷீட் ஒதுக்க முன்­வரு­வது பெரிய அதி­ச­யம்­தான்," என பூரித்­துப்­போ­கி­றார் ரெஜிஷா.

'யானை­மு­கத்­தான்' கற்­ப­னை­யும் யதார்த்­த­மும் சரி­வி­கி­தத்­தில் உள்ள குடும்­பப் பட­மாக உரு­வா­கி­ற­தாம். கட­வுள் திடீ­ரென நேரில் வந்­தால் எப்­படி இருக்­கும் என்­பதை திரைக்­கதை மிக சுவா­ர­சி­ய­மாக விளக்­கு­மாம்.

"ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் கட­வுள் இப்­ப­டித்­தான் இருப்­பார் என்ற பார்வை இருக்­கும். இதில் கடவுள் இப்­ப­டி­யும் இருப்­பார் என்­ப­தைச் சொல்­கி­றேன். கட­வு­ளுக்­கும் மனி­த­னுக்­கு­ம் இ­டையே இருக்­கும் தொடர்­பு­தான் இந்­தப்­ப­டம்.

"இதை வழக்­க­மான பாணி­யில் சொல்­லா­மல் எனக்­குத் தெரிந்த அள­வில் சற்று வித்­தி­யா­ச­மான கோணத்­தில் கூறியுள்­ளேன். ஒரு சாமா­னி­ய­னின் வாழ்க்­கை­யில் கட­வுள் வரு­கி­றார். அதற்­கான கார­ண­மும் கட­வுள் வரு­வ­தற்­கான நோக்­க­மும் புதிதாக இருக்­கும். அது படம் பார்க்­கும் ரசி­கர்­க­ளுக்கு சுவா­ர­சி­யத்­தைத் தரும். யோகி பாபு திரை­யில் தோன்­றும் ஒவ்­வொரு காட்­சி­யும் ரசி­கர்­க­ளுக்கு நல்ல நகைச்­சுவை விருந்­தாக அமையும். கூடவே சிந்­திக்­க­வும் வைக்­கும்," என்­கி­றார் ரெஜிஷா.