'பேய் என்றால் அலறுவேன்'

'பேய் என்றால் அலறுவேன்'

3 mins read
dcd3daa6-eec2-4d6c-86dd-9f5b8fa726c4
-
Google News Preferred Icon

திரை­யு­ல­கில் நடிக்­கத் தொடங்கி 15 ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யில், இப்­போ­து­தான் தனி நாய­கி­யாக நடிப்­ப­தில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் காஜல் அகர்­வால்.

அண்­மை­யில் இவ­ரது நடிப்­பில் வெளி­யான படம் 'கோஷ்டி'.

இதை­ய­டுத்து 'கருங்­காப்­பி­யம்', 'உமா' என வரி­சையா­கப் புதுப்­ப­டங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். அனைத்தை­யும்­விட முக்­கி­ய­மாக 'இந்­தி­யன் 2' படத்தை மிக­வும் எதிர்­பார்ப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"நான் திரைத்­து­றை­யில் அறி­மு­க­மாகி இத்­தனை ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன என்­பதை நினைத்­துப் பார்த்­தால் எனக்கே வியப்­பாக உள்­ளது. இதை வெற்றி எனக் கரு­து­கி­றீர்­கள் எனில், அதற்கு நான் மட்­டுமே கார­ணம் அல்ல. எனது குடும்­பம், நெருக்­க­மான நண்­பர்­கள், திரை­யு­ல­கத்­தி­னர் எனப் பல­ரும் பங்­களித்­துள்­ள­னர்.

"திரு­ம­ண­மாகி ஒரு குழந்­தைக்­கும் தாயா­கி­விட்­டேன். இப்­போது எனது கண­வர் பக்­க­ப­ல­மாக இருக்­கி­றார். ஆறு மாதக் கைக்­கு­ழந்­தையை வீட்­டில் விட்­டு­விட்டு நடிக்க வந்­தி­ருக்­கி­றேன்.

"என் தாயா­ரின் ஆத­ரவு இன்றி என்­னால் தொழி­லைக் கவ­னிக்க இய­லாது. எனவே எனது ஒவ்­வொரு வெற்­றி­யி­லும் பல நல்ல உள்­ளங்­கள் துணை நிற்­கின்றன.

"மேலும் ரசி­கர்­களின் அன்பைக் குறிப்­பிட வேண்­டும். அது­தான் இத்­தனை ஆண்­டு­களாக என்னை நம்­பிக்­கை­யு­டன் முன்­னே­றிச் செல்ல தூண்­டு­கோ­லாக உள்­ளது," என்­கி­றார் காஜல் அகர்­வால்.

'லைவ் டெலி­காஸ்ட்', 'கோஷ்டி' என புதுப்­ப­டங்­கள், இணை­யத்­தொ­டர்­கள் பேய்க் கதை­களை மைய­மாக வைத்து உரு­வாகி உள்­ளன. இவற்­றில் காஜல் அகர்வால்­தான் நாயகி.

"ஒரு ரக­சி­யம் தெரி­யுமா? எனக்­குப் பேய்க்கதை­கள் என்­றால் அறவே பிடிக்­காது. பேய் என்று சொன்­னாலே பயத்­தில் அல­றி­வி­டு­வேன். திகில் படங்­களைப் பார்க்­கவே மாட்டே­ன்.

"ஆனால் பேய்க்கதை­களை ரசி­கர்­கள் வெகு­வாக ரசிக்­கின்­ற­னர். அத­னால் தொழில் என்று வந்த பின்­னர் எனது தனிப்பட்ட பயம், நம்­பிக்­கையை மூட்டை கட்டி வைத்­து­விட்டு, நடிக்­கி­றேன்.

"இயக்­கு­நர் வெங்­கட் பிரபு என்னை சந்­தித்து 'லைவ் டெலி­காஸ்ட்' இணை­யத் தொட­ரில் நடிக்­கக் கேட்­ட­போது, பயத்தை மீறி முயற்சி செய்து பார்க்­க­லாம் என்று தோன்­றி­யது. ஆனால் விமர்­சன ரீதி­யில் நல்ல பெயர் கிடைத்­துள்­ளது.

"அதே­போல் 'கோஷ்டி' படத்­தில் திகில் கொஞ்­சம் குறை­வு­தான். நகைச்­சுவை தூக்­க­லாக இருக்­கும். படம் முழு­வ­தும் நிறைய நகைச்­சு­வைக் கலை­ஞர்­கள் இடம்­பெற்று இருந்­த­தால், அது நகைச்­சு­வைப் பட­மா­கவே ரசி­கர்­கள் மன­தில் இடம்­பெற்­றி­ருக்­கும் என நம்­பு­கி­றேன்," என்று சொல்­லும் காஜல், திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும் தமிழ் ரசி­கர்­கள் தன்னை முன்­னணி கதா­நா­ய­கி­யாக அங்­கீ­க­ரித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

ரசி­கர்­க­ளின் இந்த அன்­புக்­குக் கட­மைப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தனி நாய­கி­யாக நடிக்­கத் தொடங்­கி­ய­தும் மன­நிறைவு அதி­க­ரித்­துள்­ளது என்­கி­றார்.

"முன்­பெல்­லாம் முன்­னணி நாய­கர்­க­ளு­டன் இணைந்து நடித்த நீங்­கள், இப்­போது இரண்­டாம் நிலை­யில் உள்­ள­வர்­க­ளு­டன் நடிக்­கி­றீர்­களே என்று கேட்­கி­றார்­கள். முன்பு கதா­நா­ய­கர்­களை நம்பி உரு­வாக்­கப்­பட்ட கதை­யில் நானும் இருந்­தேன், அவ்­வ­ள­வு­தான்.

"ஆனால் இப்­போது என்னை மட்­டுமே முழு­மை­யாக நம்பி உரு­வா­கும் படங்­களில் நடிக்­கி­றேன். இப்­போ­து­தான் எனது உண்­மை­யான பலம் என்­ன­வென்று புரி­கிறது. இது­வரை பெற்ற அனு­ப­வங்­க­ளைக் கொண்டு தனி நாய­கி­யாக முத்­திரை பதிக்க முயன்று வரு­கி­றேன்," என்­கி­றார் காஜல் அகர்­வால்.

'இந்­தி­யன் 2' உள்­ளிட்ட பெரிய படங்­களில் நடிக்க தம்மை ஒப்­பந்­தம் செய்­வது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், இன்­னும்­கூட தனக்கு வர­வேற்பு உள்­ளது எனில் அதற்கு ரசி­கர்­க­ளின் ஆத­ர­வு­தான் கார­ணம் என்­கி­றார்.

ரசி­கர்­கள் என்­றும் தன்னை நினை­வில் வைத்­தி­ருப்­ப­தற்கு ஏற்ற கதா­பாத்­தி­ரங்­களைத் தேர்வு செய்து நடிக்க வேண்­டும் என்­பதே இப்­போது தனது ஒரே இலக்கு என்­றும் காஜல் அகர்வால் கூறு­கி­றார்.

, :

தமி­ழ­கத்  