'அழக்கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறேன்'

3 mins read
bc6af7d2-3ec9-4a37-a58f-cdf37cdb4fa6
-

சிம்பு நடித்­தி­ருக்­கும் 'பத்து தல' படம் மார்ச் 30ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கிறது. இப்­ப­டத்­தின் இசை வெளி­யீட்டு விழா அண்­மை­யில் நடை­பெற்­றது. அந்த நிகழ்ச்­சி­யில் பேசிய சிம்பு, "உணர்­வு­பூர்­வ­மான

காட்­சி­க­ளிலோ நிகழ்ச்­சி­க­ளிலோ நான் அழுது விடு­வேன். ஆனால் உங்­க­ளுக்­காக நான் இன்று அழக்­கூ­டாது என்று நினைத்து வந்­தி­ருக்­கி­றேன்," என்று கூறி அவ­ரது ரசி­கர்­களை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­தி­னார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்­கத்­தில் சிம்பு, கவு­தம் கார்த்­திக் நடித்­துள்ள படம் 'பத்து தல'. இந்­தப் படத்­தின் இசை வெளி­யீட்டு விழா­வில் சிம்பு, கவு­தம் கார்த்­திக், பிரியா பவானி

சங்­கர் ஆகி­யோர் பேசி­னர்.

சிம்பு பேசு­கை­யில், "கன்­ன­டத்­தில் இந்­தப் படத்­தில்

சிவ ராஜ்­கு­மார் நடித்­தி­ருப்­பார். அவர் அங்கே ஒரு சூப்­பர் ஸ்டார். அவர் கதா­பாத்­தி­ரத்­தில் நான் எப்­படி நடிக்க முடி­யும் என தயங்­கி­னேன். அதை­யும் தாண்டி இந்­தப் படத்தை ஒத்­துக்­கொண்­ட­தற்கு கார­ணம் கவு­தம்­தான்.

"சிறிய படம், பெரிய படம் எது­வாக இருந்­தா­லும் எனக்கு பிடித்­தி­ருந்­தால் அந்­தப் படத்­தில் நடித்­த­வர்­களைக் கூப்­பிட்டு பாராட்­டும் பழக்­கம் எனக்கு உண்டு. ஏனென்­றால் தமிழ்த் திரை­யு­ல­கில் தட்டிக் கொடுப்

பதற்கு யாரும் இல்லை; தட்டி விடு­வ­தற்கு நிறைய பேர் இருக்­கி­றார்­கள்.

"எனக்கு தட்­டிக்­கொ­டுக்க என் ரசி­கர்­கள் மட்­டும்­தான் இருக்­கி­றார்­கள். கவு­தம் கார்த்­திக் நல்ல பையன். தங்­க­மான பையன். அந்த பையன் நிறைய பிரச்­சி­னை­களை சந்­தித்­து­தான் இந்த இடத்­திற்கு வந்­துள்­ளார்.

"எனக்கு இந்­தப் படம் வெற்­றிப்­ப­ட­மாக அமை­கி­றதோ இல்­லையோ, அவ­ருக்கு இந்­தப் படம் மிகப்­பெ­ரிய வெற்­றிப்­ப­ட­மாக அமை­யும்.

"கவு­த­மிற்­காக மட்­டுமே இந்­தப் படத்தை முடித்­துக்

கொடுக்க வேண்­டும் என்று எண்­ணி­னேன்.

"ஏஆர் ரஹ்­மான் சார் என் காட்­பா­தர். ஒரு சிஷ்­ய­னாக அவ­ருக்கு என் மேலே உள்ள அன்பை காப்­பாற்­று­வேன்.

ஆன்­மி­கம் வழி­யி­லும் அவர் எனக்கு குரு­வாக இருந்­துள்­ளார்.

"எல்­லோ­ரும் என்­னி­டம், முன்பு எப்­போ­தும் வேக­மாக பேசு­வீர்­கள். இப்­போது எல்­லாம் அமை­தி­யாக பேசு­கி­றீர்­களே! என்று கேட்­கி­றார்­கள். அதற்கு கார­ணம் உண்டு.

"முன்­பெல்­லாம் 'நான் யார் என்று தெரி­யு­மாடா?' என்ற அள­வுக்கு பேசி

யிருக்­கேன். அப்­போது நிறைய கஷ்­டத்­தில் இருந்­தேன். இனி நான் சினி­மா­வில் இருக்­க­மாட்­டேன்; என் கதை முடிந்­து­விட்­டது எனப் பேசி­னார்­கள்.

"அந்த நேரத்­தில் நான் தான் எனக்கு துணை­யாக இருந்­தேன். அத­னால்­தான் அது­போன்று கத்தி பேசு­வது எல்­லாம் நடந்­தது.

"மாநாடு' படத்­தைக் கொண்­டாடி, 'வெந்து தணிந்­தது காடு' படத்­தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்­போது இந்த மேடை­யில் கொண்­டு­வந்து என்னை நிறுத்தி இருக்­கி­றீர்­கள். பிறகு எப்­படி கத்தி பேச முடி­யும்? பணி­வா­கத்­தான் பேச வேண்­டும். இனி பெரி­தாக பேசு­வ­தற்­கெல்­லாம் ஒன்­றும் இல்லை; செயல் மட்­டும்­தான்.

"இனி­மேல் ரசி­கர்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்­க­லாம். மற்­ற­வற்றை நான் பார்த்­துக்­கொள்­கி­றேன். இனி­மேல் நான் என்ன பண்­ணு­கி­றேன் என்­பதை மட்­டும் பாருங்­கள்.

"சாதா­ர­ண­மாக வர­வில்லை. வேறு மாதிரி வந்­துள்­ளேன். இனி­மேல் என் ரசி­கர்­களை நான் அழுது, தலைகுனிய விட­மாட்­டேன்.

"இந்­தப் படத்­தில் எனக்கு ஜோடி இல்லை; நிஜத்­தி­லும் இல்லை," என்று அவர் உருக்­க­மாகப் பேசி­னார்.

அவ­ரைத் தொடர்ந்து பேசிய கவு­தம் கார்த்­திக், "பத்து தல' என் வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான படம். இயக்­கு­நர் கிருஷ்ணா சார், நிறைய கஷ்­டங்­க­ளைத் தாண்டி வந்­தி­ருக்­கி­றார்.

"எனக்கு இந்­தப் படத்­தில் முக்­கி­ய­மான வேடம் கொடுத்­தி­ருக்­கி­றார். சண்­டைக் காட்­சி­கள் இந்­தப் படத்­திற்கு பெரிய பலம்," என்­றார் அவர்.

அவ­ரைத் தொடர்ந்து இந்­தப் படத்­தில் முக்­கிய வேடத்­தில் நடித்­தி­ருக்­கும் பிரியா பவானி சங்­கர், "சிம்பு அண்­ணன், எனக்கு லண்­ட­னைச் சுற்­றிக் காட்டினார். அவரின் ஆன்­மீக பய­ணம் பற்றி நிறைய சொன்­னார்.

"அவரின் கை, கால் எல்­லாமே நடிப்­ப­தைப் பார்த்­தேன். நான் பார்த்த அவ­ரின் நடிப்பை நீங்­களும் பார்க்க விரும்­பி­னால் மார்ச் 30ஆம் தேதி திரை­ய­ரங்­கி­னில் வந்து பாருங்­கள்," என்று கூறி­னார்.