'இது மூன்று நாள் கதை'

'இது மூன்று நாள் கதை'

3 mins read
1bae7c48-e3bf-4723-82b1-912c6aec5e3a
-

1947ஆம் ஆண்டு இந்­தியா சுதந்­தி­ரம் பெற்­ற­தற்கு முதல் நாளும் சுதந்­தி­ரத்­துக்கு அடுத்த நாளும் ஒரு கிராமத்தில் என்ன நடந்­தது என்­ப­து­தான் இந்­தப் படத்­தின் கதை­யாம்.

"இந்­தி­யா­வில் ஆங்­கி­லே­யர்­கள் சுமார் முந்­நூறு ஆண்­டு­கா­லம் பல்­வேறுவித­மாக ஆதிக்­கம் செலுத்தி வந்­த­னர். அக்­கா­லகட்­டத்­தில் என்னவெல்­லாம் நடந்­தன என்­பதை மூன்று நாள்­களில் விவரித்­துள்­ளோம்.

"மேற்­குத் தொடர்ச்சி மலை அடி­வா­ரத்­தில் உள்ள புளி­யங்­குடி என்ற கிரா­மத்­தில் நடக்­கும் கதை இது. ஆனால், உண்­மைக் கதை கிடை­யாது. இப்­படி நடந்திருக்­க­லாம் என்று சொல்ல வரும் கற்­ப­னைக் கதை.

"இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்து பல ஆண்­டு­க­ளா­கி­விட்டன. பிரிட்­டிஷ்­கா­ரர்­களும் இங்கு இல்லை. ஆனால், அ­வர்­க­ளு­டைய சிந்­த­னை­யின் தாக்­கம் அப்­போது மட்­டு­மல்ல, இன்­ற­ள­வும் தொடர்வது வியப்பளிக்கி­ற­து.

"ஆங்­கி­லே­யர்­கள் குறித்து காந்தி கருத்து தெரி­வித்­த­போது, 'நமக்கு உண்­மை­யான எதிரி பிரிட்­டிஷ்­காரர்­க­ளின் சிந்­த­னை­தான்' என்­றார். உதா­ர­ணத்­துக்கு, தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் வேலை பார்க்­கும் இளை­யர்­கள் சாப்­பி­டச் செல்­லும் இடத்­தி­லும்­கூட அதில் கவ­னம் செலுத்­தாமல் 'நாளை மேலா­ளர் நம்மிடம் ஒப்­ப­டைத்த பணி குறி்த்து விசா­ரிப்­பாரே' என்று அதி­கா­ரியை நினைத்து பயத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தைப் பார்க்­க­லாம்.

"சம்­பந்­தப்­பட்ட அதி­காரி அருகே இல்­லை­யென்­றா­லும் அந்த இடத்­தில் ஒரு­வித பயம் பர­வு­கிறது என்­றால் அதை ஏற்­ப­டுத்­து­வ­து­தான் பிரிட்­டிஷ்­கா­ரர்­க­ளின் சிந்தனை என்று சொல்கிறேன்.

"அது எந்த மாதி­ரி­யான பயம், அந்­தப் பயத்­தி­ல் இருந்து கிராம மக்­கள் எப்­படி வெளியே வந்­தார்­கள், அவர்­கள் நினைத்­த­படி உண்­மை­யான சுதந்­தி­ரம் கிடைத்­ததா, ஆகஸ்ட் 16ஆம் தேதி அந்த கிரா­மத்­தில் என்ன நடந்­தது என்­பதை விறு­வி­றுப்­பான திரைக்­க­தை­யு­டன் சொல்­கிறோம்," என்­கி­றார் இயக்கு­நர் பொன்.குமார்.

இப்­ப­டத்­தின் குறு முன்னோட்­டக் காட்­சித்­தொகுப்பு அண்­மை­யில் வெளி­யா­னது. அதில் நாயகன் கௌதம் கார்த்­திக் ஆவே­ச­மாகப் பொங்­கு­கி­றார்.

"கெள­தம் கார்த்­திக் இந்­தப் படத்­தில் ஒப்­பந்­த­மா­வ­தற்கு முன்பு வேறு சில நாய­கர்­க­ளைத்­தான் அணு­கி­னேன். அதுதான் உண்மை. எனி­னும் சில கால தாம­தங்­கள் கார­ண­மாக அவர்­கள் ஒப்­பந்­த­மா­க­வில்லை. அதன் பிற­கு­தான் கௌதமை அணு­கி­னேன்.

"இந்­தக் கதைக்கு கதா­நா­ய­கன் தேவை­யில்லை. கதைக்கு ஏற்ற மாதிரி முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க ஒரு­வர் தேவைப்­பட்­டார். அதற்கு கௌதம் பொருத்­த­மாக இருந்­தார். எனி­னும் தனது கதா­பாத்­தி­ரத்தை கதை நாய­க­னாக அவnt மெரு­கேற்­றி­ உள்­ளார்.

"கௌதம் கார்த்­திக் பிர­மா­த­மாக நடிப்­பார் என்­பது எல்­லா­ருக்­கும் தெரி­யும். அந்த நடிப்பை உடன் நடிக்­கும் நடிகர்­க­ளுக்­கும் கடத்­தும் அரு­மையான கலை­ஞர் அவர்.

"இந்­தப் படத்­தின் தொடக்­கப் பணி­களில் இருந்து என்­னு­டன் இணைந்து பய­ணம் செய்­த­து­டன் பல வகை­யி­லும் ஆத­ர­வாக இருந்­தார். அவ­ரது இந்த ஈடு­பாடு, என்­னைப் பல­வ­கை­யி­லும் ஊக்கப்­படுத்­தி­யது. எனது படைப்­பின் மீதான நம்­பிக்­கையை அதி­க­ரிக்­கச் செய்தது அவர்­தான்," என்­கி­றார் பொன்.குமார்.

'1947 ஆகஸ்டு 16' படத்­தில் ரேவதி என்ற புது­மு­கத்தை நாய­கி­யாக அறி­மு­கம் செய்­கின்­ற­னர். அடிப்­ப­டை­யில் சிறந்த பர­த­நாட்­டி­யக் கலைஞ­ராம். நடிக்­கச் சம்மதமா என்று கேட்­ட­போது, 'இது­தான் எனது ஆசை' என்று சொல்லி, உடனே சம்­ம­தித்­துள்­ளார்.

"கதைப்­படி, ஊர் ஜமீன்­தா­ரின் மக­ளாக வரு­கி­றார். கோவில் சிற்பம் மாதிரி வலம் வர­வேண்­டிய கதா­பாத்திரம். நடிப்­பின் மீது மிகுந்த ஆர்­வம் உள்­ள­வர் என்பதால் நேர்த்­தி­யாக நடித்­துள்­ளார்.

"நடி­கர் புகழை வித்தி­யா­ச­மான பாத்­தி­ரத்­தில் காண முடி­யும். அவரை ஒப்­பந்­தம் செய்த உட­னேயே, அவ­ரது சுருள் முடியை தலைக்­குப் பின்­னால் இழுத்துக்­கட்­டச் சொல்­லி­விட்­டேன்.

"வெறும் நகைச்­சுவை பாத்­தி­ர­மாக இல்­லா­மல், உணர்வு­பூர்­வ­மான கதா­பாத்­தி­ரத்தை நன்கு உள்­வாங்கி நடித்­துள்­ளார்.

"மற்­ற­வர்­களும் சிறப்­பாக ஒத்­து­ழைத்­த­னர். படம் விரை­வில் வெளி­யா­கும்," என்­கி­றார் அறி­முக இயக் கு­நர் பொன்.குமார்.