மும்பையில் புது வீடு வாங்கி குடியேறும் சூர்யா தம்பதியர்

மும்பையில் புது வீடு வாங்கி குடியேறும் சூர்யா தம்பதியர்

1 mins read
4508d361-508e-4c48-b8be-eff0fca46d37
-

நடி­கர் சூர்யா, ஜோதிகா தம்­ப­தி­யர் மும்­பை­யில் குடி­யேறி உள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அங்­குள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் சுமார் ஒன்­ப­தா­யி­ரம் சதுர அடி கொண்ட பெரிய வீட்டை இந்த நட்­சத்­திர ஜோடி அண்­மை­யில் வாங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த வீட்­டில் இருந்து சூர்யா வெளியே வரும் புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்­ளன.

ஜோதிகா தற்­போது இந்தி இணை­யத்­தொ­ட­ரில் நடித்து வரு­கி­றார். அவ­ருக்கு இந்தி திரைப்­படங்­களில் நடிக்­கும் வாய்ப்­பு­களும் தேடி வரு­கின்­றன.

இதை­ய­டுத்தே மும்­பை­யில் புது வீடு வாங்கி குழந்­தைகளுடன் அங்கு உடனடியாகக் குடி­யே­று வது என முடிவு செய்­தா­ராம் சூர்யா.

சூர்­யா­வும் நேரடி இந்­திப் படம் ஒன்­றில் நடிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. ஏற்­கெ­னவே சென்­னை­யில் மிகப்­பெ­ரிய வீடு கட்­டி­யுள்ள சூர்யா­வும் அவ­ரது சகோ­த­ரர் கார்த்­தி­யும் தங்­கள் பெற்­றோ­ரு­டன் ஒன்­றாக வசித்து வரு­கின்­ற­னர்.