தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரட்டை வேடங்களில் விஷால், எஸ்.ஜே.சூர்யா

2 mins read
03011388-e114-4537-8ddc-10cdf9124e2c
-

இயக்­கு­நர் ஆதிக் ரவிச்­சந்­தி­ரன் இயக்கி இருக்­கும் படம் 'மார்க் ஆண்­டனி'. இந்­தப் படத்­தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இரு­வ­ரும் இரட்டை வேடத்­தில் தந்தை மக­னாக நடித்­தி­ருப்­

ப­தா­க­வும் 1975 கால­கட்­டத்தை கண்­முன்னே கொண்டு வரும் படமாக இருக்கும் என்று கூறினார் இயக்­கு­நர்.

'த்ரிஷா இல்­லனா நயன்­தாரா', 'அன்­பா­ன­வன் அச­ரா­த­வன் அடங்­கா­த­வன்', 'பஹிரா' ஆகிய படங்­களை இயக்­கி­ய­வர் ஆதிக் ரவிச்­சந்­தி­ரன்.

படம் பற்றி அவர் கூறு­

கை­யில், "இது சண்­டை­கள் நிறைந்த குண்­டர் கும்­பல் படம். 1975லிருந்து 1995 வரை­யி­லான கால­கட்­டங்­களில் நடக்­கும் கதை.

விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்­வ­ரா­க­வன், சுனில்,

ஒய்.ஜி.மகேந்­தி­ரன், ரிது­வர்மா, அபி­நயா, நிழல்­கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மலே­சியா நடி­கர் டி.எஸ்.ஜே என பெரிய நட்­சத்­தி­ரப் பட்­டா­ளமே படத்­தில் நடித்­தி­ருக்­கி­றார்­கள்.

"குண்­டர் கும்­பல்­க­ளுக்­குள் நடக்­கும் சண்­டை­கள்,

துரோ­கங்­கள், வன்­மங்­கள், பாசப்­பி­ணைப்புகள், குடும்ப உணர்­வு­கள் என்று பல திசை­க­ளி­லும் படம் பய­ணிக்­கும். இடையே 1965 கால­கட்­ட­மும் வந்­து­போ­கும். அத்­தனை

நடி­கர்­க­ளின் தோற்­றங்­களும் அண்­மை­யில் வெளி­யான

சுவ­ரொட்­டி­யில் இருந்­தது. அதைப் பல­ரும் பாராட்­டி­னர்.

"விஷா­லி­டம் `எனிமி' படப்­பி­டிப்­பில்­தான் கதை­யைச் சொன்­னேன். உடனே விஷால் நடிக்க ஒத்­துக்­கொண்டார். 'எனிமி' படத்­தின் தயா­ரிப்­பா­ளர் வினோத்­ கு­மார்­தான் இந்­தப் படத்­தை­யும் தயா­ரிக்­கி­றார்.

"எஸ்.ஜே.சூர்­யா­வி­டம் கதை­யைச் சொல்­லச் சென்­றேன். அவர் இப்­போது வேண்­டாம் என்று கூறி தட்­டிக் கழித்­தார். விஷால்­தான் எஸ்.ஜே.சூர்­யா­வி­டம் 'கதை­யைக் கேளுங்­கள். உங்­க­ளுக்கு பிடித்­துப்­போ­கும்," என்று கூறி கதை­யைக் கேட்க வைத்­தார்.

"கதை­யைக் கேட்­ட­தும் எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்புக்­கொண்­டார். படத்­தில் ஜாக்கி பாண்­டி­ய­னாக தந்­தை­யும் மதன் பாண்­டி­ய­னாக மக­னு­மாக அவரே நடித்­தி­ருக்­கி­றார்.

"அவ­ரைப்­போல செல்­வ­ரா­க­வ­னுக்கு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரம். அவர் அந்த கதா­பாத்­தி­ரத்­தில் விரும்பி நடித்­தார். இந்­தப் படத்­தில் அவர் ஒரு பாட­லுக்கு நட­ன­மும் ஆடி­யி­ருக்­கி­றார்.

"சென்­னை­யில் பதி­னைந்து நாள்­கள் தொடர்ந்து படப்­

பி­டிப்பு நடத்திக்கொண்டு இருந்­தோம்.

"ஒரு பெரிய சுவரை, ஒரு லாரி வேக­மாக வந்து இடித்­துக்­கொண்டு நிற்­க­ வேண்டும். அந்த காட்சி எடுக்­கும்­போது விஷால், எஸ்.ஜே.சூர்யா, 350 துணை நடி­கர்­கள் அனை­வ­ரும் இருந்­தார்­கள்.

"காட்­சிப்­படி எஸ்.ஜே.சூர்யா விஷாலை உதைத்­த­தும் விஷால் தூர போய் விழு­வார். அப்­போது ஒரு லாரி நேராக வர­வேண்­டும்.

"ஆனால் லாரி கட்­டுப்­பாட்டை இழந்து வேக­மாக வரத்­தொ­டங்­கி­யது. விஷால் படப்­பி­டிப்பு நடக்­கிறது என்று தரை­யில் குப்­புற படுத்­துக் கிடந்­தார். ஆனால் காட்­சி­யைப் பார்த்­துக்­கொண்டு இருந்த எங்­க­ளுக்கு விப­ரீ­தம் நடக்­கப்­போ­கிறது என்று தெரிந்­தது.

"நல்­ல­வே­ளை­யாக லாரி ஓட்­டு­நர் வண்­டியை எங்கள் பக்­கம் திருப்­பி­னார். நாங்­கள் உடனே குதித்து தப்­பித்­தோம். கட­வுள் அரு­ளால் நாங்­கள் உயிர் தப்­பி­னோம். அந்­தப் பதி­னைந்து நிமி­டத்­தில் அத்­தனை பேரும் ஆடிப்­போ­ய்விட்டோம். மிகப்­பெ­ரிய உயிர்ச்­சே­தம் தவிர்க்­கப்­பட்­டது. நாங்கள் தப்­பித்தது தெய்­வச் செயல்­தான்,'' என்று நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார் இயக்­கு­நர் ஆதிக் ரவிச்சந்திரன்.