கவர்ச்சிகரமானது என்பதால்தான் திரையுலகம் குறித்து மற்ற துறைகளைச் சார்ந்தவர்கள் அதிகமாகவும் ஆர்வமாகவும் பேசுவதாகச் சொல்கிறார் ரெஜினா.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது திரைப்பயணத்தில் நல்லவை, கெட்டவை, மறக்க இயலாதவை எனப் பல்வேறு அனுபவங்களை எதிர்கொண்டதாகச் சொல்கிறார்.
"நான் சினிமாவில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கத்தில் நான் பார்த்த திரையுலகுக்கும் இப்போதுள்ள நிலைக்கும் இடையே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
"நான் பெற்ற அனுபவங்கள் என்னைப் பக்குவப்படுத்தி உள்ளன. நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். நல்ல நடிகை என்று பெயர் வாங்க முடிந்தது.
"தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என்று இடைவிடாமல் நடித்து வருகிறேன். ஒரு நடிகையாக நான் தொட்டுள்ள உயரம் மகிழ்ச்சி அளிக்கிறது. இதே வேகத்தில் செல்ல முடிவெடுத்துள்ளேன்," என்கிறார் ரெஜினா.
'மிஸ்டர் சந்திரமவுலி' படத்தில் ரெஜினா, கௌதம் கார்த்திக்.

