சம்பள விஷயத்தில் மற்ற நடிகைகளைப்போல பெரிதாக பிரச்சினை ஏதும் செய்யாதவர் என்ற பெயரை எடுத்திருக்
கிறார் பிரியா பவானி சங்கர். அதனாலேயே பல படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
சின்னத்திரை நடிகையாக இருந்து பின்னர் பெரிய திரையில் காலடி வைத்தவர் இவர். சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அதனாலேயே மீடியா குறித்தும் பொது விஷயங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவும் கொண்டுள்ள ஓர் அழகான நாயகிதான் பிரியா பவானி சங்கர். சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வருகிறார்.
தற்பொழுது இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், கவுதம் மேனன் நடித்துள்ள 'பத்து தல' படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
வணிக நோக்கத்துடன் எடுக்கும் படங்களில் நாயகிகளின் காட்சிகள் குறைவாகத்தான் இருக்கும் என்று முன்னோட்ட நிகழ்ச்சியின்போதே தனது கதாபாத்திரம் படத்தில் எப்படி இருக்கும் என்பது பற்றி குறிப்பாக உணர்த்தி இருந்தார்.
பிரியா பவானி சங்கர் தொடர்ந்து பல சிறு வரவுசெலவு படங்களில் நடித்து வருகிறார். தனது சம்பளத்தை மொத்தமாக கோடிகளில் இன்னமும் அவர் அதிகரிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
'பத்து தல' படம் பல ஆண்டு
களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கே 5 கோடி ரூபாய் சம்பளம் என்றும் படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என்றும் நாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் 'பத்து தல' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை சம்பளம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், சாயிஷா அண்மையில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால்தான் அவருக்கு இப்பொழுது உள்ள நிலைக்கு ஏற்ற சம்பளம் பேசப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
பல கோடி ரூபாய் சம்பளத்தை எல்லாம் கேட்காமல், சரியான சம்பளத்தை வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகியாக மாறி உள்ள பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஒரு கையில் உள்ள 5 விரல்களை அப்படியே காட்டும் அளவுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் 'பத்து தல' படத்திற்கு பிறகு 5 படங்கள் உள்ளன. 'பொம்மை', 'ருத்ரன்', 'டிமான்டி காலனி 2', 'இந்தியன் 2', 'ஜீப்ரா' எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
"படத்தின் இயக்குநர் கிருஷ்ணா அனைவரையும் மரியாதையாக நடத்துவார். சிம்புக்கு என்ன மரியாதை கொடுக்கிறாரோ அதே மரியாதை மூத்த நடிகைக்கும் தருவார். சிம்புக்கு நடிக்க தெரியும். அதில் அவர் சிறந்த ஆளுமை உள்ளவர். ஆனால் மூத்த நடிகைக்கு அது சரியா வராது. அவர்களிடம் கிருஷ்ணா அனுசரித்து போவார். அதுதான் மனித தன்மை. அதை அனைவரிடமும் எதிர்பார்க்கிறேன். நானும் அதை எல்லோரிடமும் கொடுக்கிறேன். இதுபோன்ற மனப்பான்மை எல்லோரிடமும் உடனே வந்துவிடாது. அதை திரைத்துறையில் நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன்," என்று கூறினார் பிரியா பவானி
சங்கர்.

