நடிகை கங்கனா ரணாவத் தனது 'கேரவன்' வடிவமைப்புக்காக ரூ. 65 லட்சம் செலவு செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாலிவுட் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. அதனால் அவர் ஆதரவையும் எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்து வருகிறார்.
தமிழில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான 'தலைவி' படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். அண்மையில்தான் அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கிறார் கங்கனா.
இவர் படப்பிடிப்புக்குச் செல்லும் இடங்களில் ஓய்வு எடுக்க தனக்கு சொந்தமான கேரவனில் தங்கி இருப்பார். அதில் இருக்கும்போது வீட்டில் இருக்கும் உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக சுமார் 65 லட்ச ரூபாய் செலவு செய்து மறு வடிவமைப்பு செய்து இருக்கிறார்.
இந்தத் தகவலை அம்பானி குடும்பம் மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பல வசதிகளைச் செய்து வரும் கேத்தன் ராவல் தெரிவித்திருக்கிறார். இவர் மும்பை காவல் துறையிலும் பணியாற்றியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது இந்தத் தகவல் பாலிவுட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

