நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது.
இணைய ஊடுருவல்காரர்கள் தனது கணக்கில் ஊடுருவி இவ்வாறு செய்திருப்பதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா.
இதையடுத்து, தனது பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவுமாறு டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிடம் ஐஸ்வர்யா கோரிக்கை விடுத்திருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
"கடந்த 24ஆம் தேதி முதல் ஐஸ்வர்யாவின் டுவிட்டர் கணக்கு வேலை செய்யவில்லை. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்.
"அதுவரை ஐஸ்வர்யாவின் ரசிகர்களும் டுவிட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்படும் எதையும் கருத்தில் கொள்ள வேண்டாம்," என செய்தித்தொடர்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"அன்புள்ள எலான் மஸ்க், நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் விளம்பரதாரர். டுவிட்டரில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.
"ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று டுவிட்டர் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

