தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மன்னிக்கத் தெரிந்த மாபெரும் மனிதன் சிம்பு'

2 mins read
6fd39d41-78dc-4605-b39c-60ad32319727
-

'பத்து தல' படத்­தின் தயா­ரிப்­பா­ளர் ஞான­வேல் ராஜா படத்­தில் நடித்த சிம்­புவை முன்பு வலைத்­த­ளத்­தில் தவ­றாகப் பேசியதையும் ஆனால் சிம்பு அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் படத்தில் நடித்தது பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இன்று 'பத்து தல' படம் உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது. கிருஷ்­ணன் இயக்­கத்­தில் சிலம்­ப­ர­சன், கௌதம் கார்த்­திக், பிரியா பவானி ஷங்­கர், கௌ­தம் மேனன் என பல தமிழ் முன்­னணி நட்­சத்­தி­ரங்­கள் நடித்­தி­ருக்­கும் மர்­மம் கலந்த அதி­ரடி திரைப்­படமாக உருவாகி இருக்கிறது. இத்­தி­ரைப்­ப­டத்­தினை கே இ ஞான­வேல் ராஜா தயா­ரிக்க, ஏ ஆர் ரஹ்­மான் இசை­ய­மைத்­துள்­ளார்.

ஞானவேல் ராஜா படத்தைப் பற்றியும் சிம்புவைப் பற்றியும் பேசுகையில், "சிம்­பு­வுக்­கும் எனக்­கும் நம்­மைச் சுற்றி யாரை வைத்­துக்­கொள்ள வேண்­டும்? யாரை வைத்­துக்­கொள்­ளக் கூடாது?

என்­ப­தைத் தீர்­மா­னிப்­ப­தில்­தான் பிரச்­சினை.

"சிம்பு பல விமர்­ச­னங்­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றார். ஏன், நானே அவரை விமர்­ச­னம் செய்­தி­ருக்­

கி­றேன்.

"திற­மை­யான மனி­தர் இப்­படி இருக்­கி­றார் என்­கிற ஆதங்­கத்­தில் அவர் நன்­றாக வர வேண்­டும் என்று­தான் விமர்­ச­னம் செய்­தேன். ஆனால் இப்­போது அவ­ரு­டைய வருகை அனை­வரையும் திருப்­திப்­படுத்தி உள்ளது.

"நான் அவரை பொதுத் தளத்­தில் விமர்­ச­னம் செய்­தி­ருக்­கி­றேன். வேறு எந்த நடி­க­ராக இருந்­தா­லும் எனக்கு வாய்ப்­ப­ளித்­தி­ருக்க மாட்­டார்­கள். அவர் எனக்கு வாய்ப்­ப­ளித்­தார். அது­தான் சிம்பு.

"நான் பல சம­யங்­களில் சிம்­பு­

வு­டன் இருந்­தி­ருக்­கி­றேன். அவர் யார் மீதும் பொறா­மைப்­பட்டோ அல்லது கவலையாகவோ இருந்து நான் பார்த்தது இல்லை. அவ­ரி­டம் நேர்­

ம­றை­யான எண்­ணங்­கள் மட்­டும்­தான் இருக்­கும்," என்று சிம்புவை புகழ்ந்து பேசினார்.

மேலும், "வில்­லன் கதா­பாத்­தி­ரத்­திற்­குப் புது­மை­யான ஆளைத் தேடி­னோம். இயக்­கு­நர் கிருஷ்ணா, கௌதம் மேனன் வில்­லன் கதா­பாத்­தி­ரத்­திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறி­னார்.

"கௌதம் மேனன் இயக்­கத்­தில்­தான் படம் பண்ண மு­டி­ய­வில்லை, அவ­ரு­டைய நடிப்­பில் படத்­தைத்

தயா­ரிக்­க­லாம் என்று நினைத்­தேன். கௌதம் மேன­னும் கதை­யைக் கேட்டு­விட்டு நடிக்க ஒப்­புக்கொண்­டார். கௌதம் கார்த்­திக் எனக்­குப் பிடித்­த­மான நாய­கர்­களில் ஒரு­வர். இந்­தத் திரைப்­ப­ட­மும் இனி வெளி­

வ­ரும் திரைப்­ப­டங்­களும் அவ­ரது வெற்­றிப் பாதைக்கு வழி அமைக்­கும்.

"கௌதம் கார்த்­திக்­குக்கு எந்த இடத்­தி­லும் தான் ஒரு பெரிய நட்­சத்­தி­ரத்­தின் மகன் என்ற நினைப்பு இருக்­காது. அவர் வெளி­யில் காட்­டும் முகம் வேறு. அவ­ருடைய உண்­மை­யான முகம் வேறு.

"ஏ.ஆர் ரஹ்­மா­னுக்கு கிருஷ்ணா மீதும் சிம்பு மீதும் அலாதி பிரி­யம். அந்­தப் பட்­டி­ய­லில் நானும் இணைய வேண்­டும் என்­பதே என்­னு­டைய ஆவல்," என்றார் ஞான­வேல்

ராஜா.